Saturday 20 August 2016





லக்னாதிபதி

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி எப்படி இருக்க வேண்டும், அவர் நின்ற நக்ஷத்திராதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதை சென்ற பதிவில் பார்த்தோம்.
ஒரு ஜாதகர் தன் ஜாதக பலன் அதாவது அது யோகமாக இருந்தால் அதன் வளர்ச்சியை அனுபவிக்க லக்னாதிபதி, லக்னத்தின் சாராதிபதி, லக்னாதிபதியின் சாராதிபதி பலம் தேவை., தோஷமாக இருந்தாலும் சரி அதை பிராயசித்தம் மூலமாக  சீர் செய்து கொள்ள அவர்களின் பலம் தேவை.  அவர்களின் பலம் இல்லாமல் மற்ற கிரஹங்களின் பலனை அனுபவிக்க முடியாது.  ஷோடஷ வர்கங்களில் குறைந்து ஐந்து வர்க்கங்களில் லக்னாதிபதியோ, அவர் நிற்கும் நக்ஷத்திராதிபதியோ, லக்னம் நிற்கும் நக்ஷத்திராதிபதியோ பலம் பெற்றுவிட்டால் அந்த ஜாதகர் எந்த நிலையிலும் தன்னை தானே உயர்த்திக் கொள்ளும் மனோபலத்தை பெற்று விடுவார்.
ஒருவர் பிரயாசித்தம் எனும் பரிகாரம் செய்ய நல்ல காலம் என்பது உத்ராயண காலமாகும்.  இல்லையென்றால் அவரின் லக்னத்தின் சாரதிபதியையோ, லக்னாதிபதியையோ, அவர் நிற்கும் சாராதிபதியையோ, அல்லது அப்போது நடக்கும் தசா நாதன் அல்லது புத்தி நாதன் இவர்களில் யாரேனும் ஒருவரை அவரின் ஒன்பதாம் அதிபதியோ, அல்லது  குருவோ, கோச்சாரத்தில் பார்க்கும் காலத்தில்  பரிகாரம் செய்யலாம். இந்த அமைப்பு அவர் ஜாதகத்திலேயே இருந்து விட்டால் அவர் எப்போது வேண்டுமானாலும் பரிகாரம் செய்யலாம். பரிகாரம் செய்ய ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்ட கோயில்கள் சிற்ந்தவை.    
சரி தற்போது கிரஹ ரீதியாக ஒவ்வொருவரும் லக்னாதிபதியாக வந்தாலும், அவர் நிற்கும் சாரதிபதியாக வந்தாலும் அவர் தன் பலத்தை இழந்தால் அதை எப்படி சீர் செய்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
சூரியன் லக்னாதிபதியாக வந்து, அல்லது லக்னம் நிற்கும் நக்ஷத்திராதிபதியாக வந்து பலவீனமாக இருந்தால்,   பாவ ரீதியாக,  ஒன்றாம் பாவமாக இருந்தால் மருத்துவ சிகிச்சை நடக்கும் இடங்களில் குடி நீர் வசதி செய்து கொடுப்பது . அந்திம காரியங்கள் நடக்கும் இடங்களில் விளக்கொளி ஏற்பாடு செய்து கொடுப்பது போன்றவற்றை செய்தால் நல்லது.  ஆதி சிவன் கோயில்  அதாவது உயர்ந்த லிங்க திருமேனி உள்ள கோயில், சங்கர நாயனார் கோயில் வழிபாடு நல்லது.
இரண்டாம் பாவமாக இருந்தால் இஷ்ட தெய்வ கோயிலுக்கு வெல்லம் வாங்கி கொடுப்பது, தேங்காய் வாங்கி கொடுப்பது, எதேனும் வசதியில்லாத ஏழைக்கு கண் அறுவை சிகிச்சைக்கு பண உதவி செய்வது,  உபநேத்ரம் வாங்கி கொடுப்பது அதாவது கண் கண்ணாடி வாங்கி கொடுப்பது ஆகியவை பலவீனத்தை போக்கி நல்ல பலனை தரும்.  திருக்கடையூர் வழிபாடு நல்லது.
மூன்றாம் பாவமாக இருந்தால் முதியோரை எக்காரணம் கொண்டும் ஒதுக்க கூடாது.  அவர்களின் சந்தோஷம் குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது.  மூத்த சகோதரனுக்கு பெண் குழந்தை இருந்தால் அவளின் திருமணத்திற்கு உதவி செய்வது நல்லது அல்லது ஒரு எழை பெண் திருமணத்திற்கு புடவை வாங்கி தருவது நல்லது. 
நான்காம் பாவமாக இருந்தால் தாய் வழி உறவுகளை மதித்து நடந்து கொள்வது நல்லது.  தாய் வழி தாத்தா பாட்டி ஆகியோரை காசிக்கு அழைத்து சென்று வருவது பலம் தரும்.  திருச்சி தாயுமானவர் கோயில் வழிபாடும், அன்னதானத்திற்கு 27 கிலோ அரிசி வாங்கி கொடுப்பது நல்லது. 
ஐந்தாம் பாவமாக இருந்தால்  வாக்கு தவறாமல் இருப்பது நலம்.  இஷ்ட தெய்வ கோயிலுக்கு சர்க்கரை பொங்கல் தானத்திற்க்கு பொருட்கள் வாங்கி கொடுப்பது நல்லது. 27 பிரதோஷ அர்ச்சனைக்கு கோயிலுக்கு வில்வ தழை வாங்கி கொடுப்பது நலம்.  தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது மனோ பலத்தை கூட்டும்.
ஆறாம் பாவமாக இருந்தால் ஏழு வகையான தான்யங்கள் கோயிலுக்கு தானம் செய்வது நல்லது.  இதய நோய் சம்மந்தமாக கஷ்டப்படுபவர்க்களுக்கு அவர்களுக்கு மருந்து வாங்கி கொடுப்பது நல்லது.  தாயின்ரத்த உறவுகள் கஷ்டப்பட்டால் உதவி செய்வது நல்லது.  கடன் வாங்காமல் இருப்பது நலம்.
ஏழாம் பாவமாக இருந்தால் மனைவியை நல்ல முறையில் கவனித்து கொள்வது நல்லது.  பெளர்ணமி பூஜைக்கு அம்பாள் கோயிலுக்கு சிவப்பு சந்தனம் வாங்கி கொடுப்பது நலம்.  கருப்பு பசு மாட்டிற்கு ஞாயிறு தோறும் உணவளிப்பது நலம். லக்ஷமி கோயிலுக்கு  கஸ்தூரி மஞ்சள் வாங்கி கொடுப்பது நலம்.
எட்டாம் பாவமாக இருந்தால் சகோதரர்கள் கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்வது நலம். தெற்கு வாயில் உள்ள வீட்டில் குடியிருக்க கூடாது.  எட்டு ஞாயிற்றுக் கிழமை இஷ்ட தெய்வ கோயிலுக்கு வெல்லம் வாங்கி கொடுப்பது நலம்.  உத்தமர் கோயில் வழிபாடு நலம். 
ஒன்பதாம் பாவமாக இருந்தால்  கோதுமை தானம் சிறந்தது.  பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காமல் இருப்பது நலம். வீட்டில் தாமிர பாத்திரத்தில் நீர் வைத்து அந்த நீரில் குளிப்பது நல்லது.  தந்தையின் உடல் நலத்தில் கவனம் கொண்டு அவர் மனம் வருந்தாமல் பார்த்துக் கொள்வது நலம்.  வயதான காலத்தில் அவர்களை தனியே விடாமல் கவனிப்பது நலம்.  குல தெய்வ வழிபாடு பலம் தரும்.
பத்தாம் பாவமாக இருந்தால் நீலம், கருப்பு ஆடைகளை தவிர்ப்பது நலம்.  ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகளுக்கு தயிர் சாதம் அன்ன தானம் செய்வது நல்லது.  ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு ஜன்ம தினம் அன்று ஸ்வீட் ( கோதுமைஅல்வா ) கொடுப்பது நலம்.  பித்ரு கர்மாக்களை தவறாமல் செய்வது பலம் சேர்க்கும்.
பதினோராம் பாவமாக இருந்தால் புலால் உண்ணுவதை தவிர்ப்பது நலம்.  குல தெய்வ வழிபாடு அவர்க்கு பால் அபிஷேகமும் பலம் சேர்க்கும்.  மூத்த சகோதரனை தந்தையாக பாவிக்க வேண்டும். அவர் குடும்ப கஷடத்திற்கு  உதவிகள் செய்வது நலம்.  குல தொழிலை உதாசீனப் படுத்தாமல் அதை வளர்ப்பது நலம் சேர்க்கும். தந்தையின் மனம்  வருந்தாமல் கூட்டுக் குடும்பத்தில் இருப்பது நலம்.   
பனிரெண்டாம் பாவமாக இருந்தால் குருடர்களுக்கு உதவி செய்வது நல்லது.  கிழக்கு வாசல் வீடு வளம் சேர்க்கும்.  மிருத்யுஞ்ச ஜபம் செய்வது  நல்லது.  திருவானைக்காவல்,  ஜலகண்டேஷ்வர் வழிபாடு நலம்.


அடுத்த பதிவில் சந்திரனை பார்ப்போம். ………ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.      

2 comments:

  1. navagracharam.blogspot.in
    ஸ்ரீ குருப்யோ நம:
    ஒரு ஜாதகர் தன் ஜாதக பலன் அதாவது அது யோகமாக இருந்தால் அதன் வளர்ச்சியை அனுபவிக்க லக்னாதிபதி, லக்னத்தின் சாராதிபதி, லக்னாதிபதியின் சாராதிபதி பலம் தேவை
    இதில் லக்னத்தின் சாராதபதி, லக்னாதிபதியின் சாராதிபதி என்ன வித்யாசம்?

    ReplyDelete
  2. Golden Nugget Casino & Hotel - Mapyro
    Welcome 통영 출장마사지 to 경주 출장안마 Mapyro, 수원 출장마사지 the home to 포천 출장안마 the best Las Vegas casino. The Golden Nugget, where great food and service meets Vegas' every 대전광역 출장샵 visit.

    ReplyDelete