Thursday 16 March 2017

சர்க்கரை நோய்

இனிப்பு:  இந்த வார்த்தையே  வயது வித்யாசம் இல்லாமல் எல்லோருக்கும் நாக்கில் நீர் வரவழைக்கும்.  விளம்பரங்கள் கூட ஸ்வீட் எடு கொண்டாடு என்பதாக இருக்கிறது.  சிறு குழந்தைகளுக்கு சாக்லட்ஸ் கொடுக்கும் போது தனக்கும் ஒன்று எடுதுத்துக் கொள்ளும் தன்மை. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கூட கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல்அந்த இனிப்பை   ஒருவருக்கும் தெரியாமல்  சாப்பிடும் தன்மை.   இப்படி எல்லோர் வாழ்விலும் அன்றாடம் கோலோச்சி கொண்டிருக்கும் சர்க்கரை ஒருவருக்கு உடலில் அதிகமானால் வரும் நோய் சர்க்கரை நோய். இன்சுலின் குறைபாட்டால் வரக்கூடியது  இது ஒருவருக்கு சர்க்கரையால் மட்டுமே வரக் கூடிய நோயா.  அல்லது தற்காலத்தில் இன்சுலின் குறைபாட்டை ஏற்படுத்தி எல்லோருக்கும் வரவழைக்கும் ஒரு உணவு சார்ந்த விஷயமா  அல்லது பரம்பரை பரம்பரை வழியாக வரக்கூடியதா.  உடலில் சர்க்கைரையின் அளவு கூடியிருப்பதை கணிக்கும் ஒரு மருத்துவர் கூட கேட்கும் கேள்வியே உங்கள் குடும்பத்தில் அம்மா அப்பா அல்லது தாத்தாவிற்கு இருக்கிறதா என்று கேட்கிறார்.   இப்படி இருக்கும் இந்த நோய் இருப்பதை ஜாதக ரீதியாக கணிக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையே என்னுடைய இந்த கட்டுரையாகும்.

வெறும் சர்க்கரை மட்டும் அல்லாமல், நேரம் தவறி உணவருந்துதல்,  அதாவது சாப்பிடும் வேளைக்குண்டான இடைவெளி அதிகமாக இருத்தல்,  பட்டை தீட்டப்பட்ட அதாவது பாலீஷ் செய்த பச்சரிசி அதிகமாக உண்பது ,  ஸ்வீட் பொட்டெடோ எனப்படும் அதிக வெள்ளை உருளைக்கிழக்கை உணவில் சேர்த்துக் கொள்வது,  அதிக வெள்ளை சர்க்கரை சேர்த்த இனிப்புகள் சாப்பிடுவது .  இவையெல்லாம் உடலில் இன்சுலின் சுரப்பியை பாதித்து அதில் குறைபாட்டை ஏற்படுத்தி சர்க்கரை நோயை கொடுக்கும்.  இதில் அதிக இடைவெளி கொடுத்து உண்பது அதாவது நேரம் தவறி உண்பது  உடலில் வாயுவை ஏற்படுத்தும். இது ஜாதகத்தில் குருவின் காரகத்துவம்.  அதேபோல் சாதரண வெல்லம், நாட்டு சர்க்கரை, வெல்லப்பாகு இவைக்கும் குரு காரணமாக இருந்தாலும் அதை நவீனமயமாக்கி வெள்ளை சர்க்கரை ஆக்கும் போது அது ஜாதகத்தில் சுக்ரனின் காரகமாக மாறும்.  இதில் இதை நீடித்து பரம்பரை வழியாக கொண்டுவருவது சனியின் வேலையாகும்.  இந்த நோயை அதிகப்படுத்துவது ராகுவின் வேலையாகும்.  இந்த நோயை கடுமையாக்கி அதாவது ஒரு இடத்தில் தங்கவைத்து சுரப்பிகளின் செயல்பாட்டை குறைத்து உடலில் கிட்னியின் செயல் பாட்டை வலுவிழக்க செய்வது கேதுவின் வேலையாகும். 


நமது உடலில்,  ஜெனடிக் கோட் எனப்படும் விகிதாசாரம் ஒரு ஜாதகனின் தந்தையின் அளவு 24%,  தாத்தாவினுடையது 32%, அவருடைய தந்தையினுடையது 16%  அதற்கு முன் 8%,6%,4%,2% ஆக மொத்தம் ஏழு தலை முறை ஜெனடிக் சார்ந்த அணுக்கள் சார்ந்த விஷயங்களும்  ஜாதகனுடையது 8% ஆக மொத்தம் 100 சதவீகமாக இருக்கும்.  இதில் எந்த தலை முறையில் என்ன வியாதி இருந்ததோ, அது அந்த விகிதாசாரத்தில் ஜாதகனின் உடலில் இருக்கும்.  அதை அதிகப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது ஜாதகனின் கடமையாகும்.

 ஜாதகத்தில் நோயை குறிக்கும் பாவம் ஆறாம் பாவம்,  அதை தீவிரப்படுத்தி தீர்க்க முடியாமல் சிறு நீரக பாதிப்பை ஏற்படுத்துவது எட்டாம் பாவமாகும். அதற்கு தீவர சிகிச்சை எடுத்து கொள்வதையும் அல்லது மருத்துவமனையில் தங்கி டயாலிசிஸ் செய்து கொள்வதையும், அந்த நோயால் கண்கள் பாதிக்கப்படுவதையும் பனிரெண்டாம் பாவமும் சொல்லும்.  இந்த ஆறாம் பாவமும்  பனிரெண்டாம் பாவமும் மிக முக்யமாக ஒருவரின் நோயின் தன்மையை துல்லியமாக குறி காட்டும்.  ஒரு ஜாதகத்தில் அயன சயன சுகஸ்தானமான பனிரெண்டாம் பாவம் ஒருவரின் தூக்கத்தை சொல்லும். ஒருவருக்கு இந்த பாவம் கெட்டு தூக்கம் சரிவர இல்லையென்றால் உடலில் முதலில்   பாதிப்பது  கல்லீரல் மற்றும் கணையமும் பாதிக்கும் . இவை கண்களை சோர்வாக்கி பார்வையில் குறைபாட்டை ஏற்படுத்தி விடும். 
இதை ஒரு மருத்துவர் இப்படி விளக்குகிறார்.:
Your body converts the food you eat into glucose that your cells use for energy. But your cells need insulin to bring the glucose in. (Reproductive system by Venus)
If your body doesn't make enough or anyinsulin, or if your cells resist the insulin your body makes, the glucose can't get into them and you have no energy. This can make you more hungry and tired than usual.
The average person usually has to pee between four and seven times in 24 hours, but people with diabetes may go a lot more.
Why? Normally your body reabsorbs glucose as it passes through your kidneys. But when diabetes pushes your blood sugar up, your body may not be able to bring it all back in. It will try to get rid of the extra by making more urine, and that takes fluids.
You'll have to go more often. You might pee out more, too. Because you're peeing so much, you can get very thirsty. When you drink more, you'll also pee more.
Because your body is using fluids to make pee, there's less moisture for other things. You could get dehydrated, and your mouth may feel dry. Dry skin can make you itchy.
Changing fluid levels in your body could make the lenses in your eyes swell up. They change shape and lose their ability to focus.
These tend to show up after your glucose has been high for a long time.

 கிரஹங்களில் சுக்ரன் சர்க்கரை நோயை முதலில் உடலில் ஆரம்பித்து வைக்கும். அதன் பிறகு குரு அதை தீவிரப்படுத்தும்.  பிறகு அதை நிரந்தரமாக்கி விடுவது சனியின் வேலையாகும்.   ஆகவே இந்த கிரஹங்கள் ஜாதகத்தில் 6,8,12 ம் பாவங்களோடு தொடர்ப்பு கொண்டாலோ, இந்த பாவங்களில் சேர்க்கை பெற்றாலோ ஒருவருக்கு சர்க்கரை வியாதி கண்டிப்பாக வரும்.  மேலும்  இந்த பாவங்கள் நீர் ராசியாக வந்தால் அதாவது கடகம், விருச்சிகம், மீனம் ஆக வந்து குரு, சுக்ரன், சனி தொடர்பு கொண்டால் நோயின் தாக்கம் அதிகமாகி அவர்கள் சிறுநீரை கட்டுப்படுத்தமுடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.  இதோடு ராகு தொடர்பு கொண்டால் அதுவும் பனிரெண்டாம் பாவத்தோடு சேர்ந்தால் உடலில் அவயத்தை வெட்ட வேண்டிய நிலைக்கு செல்ல வேண்டி இருக்கும். அதேபோல் கேது தொடர்பு கொண்டால் அதுவும் எட்டாம் பாவத்த்தில் சேர்க்கை பெற்றால்  சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு  செயல் இழந்து அதை மாற்றக்கூடிய நிலைக்கு கூட செல்ல நேரிடும். ஆகவே ஒருவரின் ஜாதகத்தில் சர்க்கரை நோயை கொடுக்க கூடிய கிரஹங்களாக குரு, சுக்ரன் ஆகியவைஆகும். அதை பாரம்பர்யத்தில் சம்பந்தப்படுதுவது சனி ஆகும். அதை தீவிரமாக மாற்றி அவயத்தை வெட்டுவது  ராகுவும் , உறுப்புகளை செயலிழக்கச் செய்வது கேதுவாகும்.  ஓவ்வொரு ராசியிலும் மிருத்யு பாகை அதாவது கண்டத்தை ஏற்படுத்தும் பாகை என்று ஒன்று இருக்கும். அந்த மிருத்யு பாகையில் உள்ள கிரஹங்கள் உடலில் உள்ள நோயை குறிகாட்டும்.  அந்த பாகையில் 6,8,12ம் பாவாதிபதிகள் , ராகு, கேது ஆகியவை நின்றால் நோயை சற்று அதிகமாகவே தரும்.



இதை சமீபத்தில் மறைந்த நமது முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஜாதகத்தை பார்த்தால் தெரியும்.  அவர் ஜாதகத்தில் நீர் ராசியான குருவின் வீடான மீனத்தில் சுக்ரன் நின்று, கடகத்தில் சனி நின்று ராகு மேஷத்தில் சுக்ரன் நக்ஷத்திரல் நின்று சர்க்கரை வியாதியை அதிகப்படுத்தியது.

இதற்கு பரிகாரமாக முதலில் நல்ல தூக்கம் வேண்டும்.  நேரம் தவறாமல் உணவு எடுத்துக் கொள்வது நல்லது.அதிலும் மேலே சொன்ன உணவு வகைகளில் கட்டுப்பாடு அவசியம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள்  பச்சரிசி உணவை விட புழுங்கள் அரிசி உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதிக நெய் சேர்த்த இனிப்புகள் சாப்பிட கூடாது. ஐஸ்கீரீம், வாழைபழம், மாம்பழம், உலர்ந்த பழங்கள், திராட்சை, கல்கண்டு ஆகியவை சாப்பிடகூடாது.  பீடி, சிகரட், மது இவை கூடாது.    சிறிய பாகற்காய் சூப் வைத்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். நார் சத்து உள்ள பொருட்கள் எடுத்துக் கொள்ளலாம். வெள்ளரி, கொய்யா, சாத்துக்குடி, ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்.அரிசி உணவிற்கு பதிலாக கோதுமை, கேழ்வரகு கலந்த உணவு எடுத்துக் கொள்ளலாம்.  இந்த நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி பசி ஏற்படும். ஆகவே சிறிய அளவு உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.       சர்க்கரை கொல்லி என்ற  பொடி ஆயுர்வேதத்தில் உள்ளது அதை வாங்கி மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.  முதன் முதலில் மருந்து எடுத்துக் கொள்பவர்கள் ஞாயிற்றுக் கிழமை அன்று வரும் குரு ஓரையில் எடுத்துக் கொண்டால் நோய் சீக்கிரம் குணமாகும்.  சித்த மருத்துவம் நன்கு பயனளிக்க கூடியது.  இதில் பஞ்ச கர்ம முறையில் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டால் சந்ததிகளுக்கு இதன் தாக்கம் இருக்காது.   மேலும் தகுந்த மருத்துவர் ஆலோசனையின் பேரிலேயே மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
நோயற்றே வாழ்வே குறைவற்ற செல்வம்.   வாழ்க வளமுடன்


அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்………………………..ph: 9094176198 
பனிரெண்டாம் பாவம் சம்பந்தப்பட்ட முக்யமான விதிகள்

1. லக்னாதிபதி பனிரெண்டில் இருந்தால் கெளவரத்திற்கு பங்கம் ஏற்படும்.

2. பத்தாமாதி பனிரெண்டில் இருந்தால் ஸ்திரமான தொழில் இருக்காது. வியாபாரம் நல்லது. உத்யோகத்தில் தொல்லைகள் இருக்கும்.  கூட்டாளிகளே எதிரிகள் ஆவார்கள்.

3. பனிரெண்டாமாதி அங்கேயே இருந்தால் கடைசிகால அமைதியான வாழிக்கை. முக்கியமாக இங்கு சாத்வீகமான கிரஹங்கள் இருந்தால் நல்லது.  உஷ்ண கிரஹங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். உஷ்ண கிரஹங்கள் இருந்தால் அமைதியான தூக்கம் இருக்காது.

4. ஏழாமாதி பனிரெண்டில் இருந்தால் அதிக செலவாளி, கூட்டு வியாபரத்தில் நஷ்டம். நோயாளியான மனைவி, பிரிவு, அதிக பணத்தாசை,  நண்பர்களால் அதிக நஷடத்தை ஏற்பார்கள். சிலர் வெளி நாட்டில் அதிக பிரச்சனையை சந்திப்பார்கள்.

5. எட்டாமாதி பனிரெண்டில் இருந்தால் தீர்க்காயுள், கடன் வசூலாகும், உயில், சொத்து, இன்சூரன்ஸ் மூலம் திடீர் தன வரவு. பலவிதமான நோய்கள், விஷ ஜந்துக்களால் தொல்லை முதலியவை ஏற்படும். இந்த பாவாதிபதியின் தசையில் ஒரு ஜாதகர் தன் கடனை அடைப்பதற்கு முயற்ச்சி எடுத்தால் அது சாத்யமாகும்.

6.  ஒன்பதாமதிபதி, பதினோராமதிபதி, பனிரெண்டில் இருந்தால் சரியான வருமானம் இருக்காது. தகப்பனாரின் சகோதரர்களால் நஷ்டங்கள் ஏற்படலாம். 

7.  இரண்டாமதி பனிரெண்டாமாதி பரிவர்த்தனை தரித்தர யோகம், வீண் செலவுகள். கண் நோய்கள் ஏற்படலாம்.

8.  மூன்றாமாதி பனிரெண்டாமாதி பரிவர்த்தனை வாக்கில் நாணயம் இருக்காது. பயணத்தால் வீண் செலவு,  இளைய சகோதரனால் வீண் விரயம், குழந்தைகளால் நிம்மதி இல்லாமை, பெண்ணால் வாழ்க்கையில் உயர்வு, ஆனால் கஷ்டங்களும் ஏற்படும்.

 9.  மூன்றாமாதி  பத்தாமாதி பனிரெண்டில் இருந்தால் எதையும் தப்பாக நினைக்கும் எண்ணம்,  உடன் பிறப்புகளால் வம்பு வழக்கு, கோர்ட் பிரச்சனை, எற்படும். முக்யமாக தம்பியின் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தில் பிரச்சனை ஏற்படலாம்.   வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

10.  ஐந்தாமாதி, பனிரெண்டாமாதி பரிவர்த்தனை குடும்ப தகராறு, குழந்தைகளால் பிரச்சனை அவர்களால் வழக்கு பிரச்சனை ஏற்படும். போட்டி, பந்தயங்களில் தோல்வி ஏற்படும்.  சிலருக்கு பிரசவத்தில் பிரச்சனை ஏற்படும்.

11. ஒன்பதாமாதி பனிரெண்டாமாதி பரிவர்த்தனை வாழ்க்கையில் அதிக எற்ற தாழ்வுகள், சரிவுகள், கஷடங்கள் இருக்கும். இங்கே சுக்ரன் அமர்ந்த சில ஜாதகரின் தந்தைக்கு இரண்டு குடும்ப்பங்கள் இருக்கலாம். அல்லது இரண்டு மனைவிகள் அமைந்திருக்க வாய்ப்புண்டு.

12.  நான்காமாதி, பனிரெண்டாமாதி தொடர்பு பரிவர்த்தனை, வண்டி வாகனங்களால் தொல்லை, வீட்டை பராமரிப்பதில் அதிக செலவு,  தாயுடன் சண்டை, ஏற்படும். சிலருக்கு மனைவி வழி உறவுகளால் ஆதாயம் அடையவும் வாய்ப்புண்டு.

13. ஆறாமாதி பனிரெண்டாமாதி தொடர்பு, அதிக நோய், பிற பெண்களின் மீது ஆசை எறபடும்.

இது விரய பாவமாக இருந்தாலும்,   இங்கு இருக்கும் கிரஹங்களால் ஒரு ஜாதகரின் இறப்பிற்கு பின் அவரின் புகழை பார்க்கலாம்.  இங்கு பலம் பெறாத உஷ்ண கிரஹங்கள் இருந்தால் அதாவது சூரியன், செவ்வாய்,புதன், ராகு, ராகுவுடன் சேர்ந்த கிரஹங்கள் இருந்தால் (குருவை தவிர) அவரின் இறப்பிற்கு பின் அவரை பற்றி அவ்வளவு நல்ல பெயர் இருப்பது கடினம்.  ஆனால், சந்திரன்,  குரு, சுக்ரன் போன்ற கிரஹங்கள் இருந்தால் அவரின் புகழ் நிலைக்கும்.   குரு சனி, குரு ராகு இவர்கள் சேர்ந்து இருந்தால் அதுவும் அது நீர் ராசியாக இருந்தால் அவரின் பூத உடலுக்கு பின் ஆயிரம் பேர் வருவார்கள்.   குரு கேது, கேது, சனி கேது  சேர்க்கை இருப்பின் அவர் இந்த ஜன்மத்தின் கர்ம வினைகளை தீர்த்தவராக இருப்பார்.  அதாவது அவரின் கர்ம வினை தொடர்ச்சி இருக்காது.  அதாவது மறு பிறப்பை அவர் எடுக்க வேண்டிய நிலை வராது. 

      
பதினோராம் பாவம் சம்பந்தப்பட்ட முக்யமான விதிகள்

 1. பதினோராமதிபன் அந்த பாவத்திலேயே இருப்பது நல்ல அறிவும், நல்ல பேச்சு திறமையும் இருக்கும்.  இவரோடு குருவும் புதனும் பலமாக இங்கு நின்றால் Phd. போன்ற உயர் படிப்புகள் சித்தியாகும்.  பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும்  பேரும் புகழும் உண்டாகும். ஆனால் குரு, புதன் லக்ன பாதகாதிபதியாகவோ, மாரகாதிபதியாகவோ  வந்து இங்கு பலம் பெற்றால் தசா புத்திகளில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.  மாரகத்துக்கு ஒப்பான கணடங்களும் ஏற்படும்.  
 
 2. லக்னாதிபதி பதினோராமாதி தொடர்பு வேதாந்தியாகவும், அதில் நிம்மதியும்  அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணமும் இருக்கும்.  கும்ப லக்னக்காரர்களுக்கு இந்த அமைப்பு சரியாக இருக்கும்.   இந்த அமைப்பில் சனியானவர் விரயாதிபதியாகவும் வருவதால் அவரின் மூல திரிகோண ஆதிபத்யம் பலம் பெற்று இந்த அமைப்பை கொண்டு வரும்.  சிலர் குடும்பத்தை விட்டு தனியான வாழ்க்கை வாழ ஆசை படுவார்கள்.  மூத்த சகோதரர்களால் சிலர் ஆதாயம் பெறுவார்கள்.

 3. இரண்டாமாதி பதினோராமாதி தொடர்பு நல்ல தனபிராப்தியும், நல்ல வருமானமும் இருக்கும். பரிவர்த்தனை சிறப்பு.  நல்ல செல்வ செழிப்பை கொடுக்கும்.  மீன லக்னத்திற்க்கு இந்த பலனை எதிர்பார்க்க முடியாது. 

4. ஏழாமாதியும், பதினோராமாதியும் தொடர்பு கொண்டால் நிறைய வெகுமதிகள் கிடைக்கும். பரிவர்த்தனை ஆனால் கூட்டு தொழிலில் பெரும் லாபம் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.   சிலருக்கு திருமணத்திற்கு நல்ல முன்னேர்றம் இருக்கும்.

 5. ஆறாமாதியும் பதினோராமாதியும் தொடர்பு , நண்பர் பகை, எதிலும் தடை, பொருளாதாரத்தில் சரிவு, நோயும் இருக்கும். இந்த அமைப்பில் ஆறாமாதி இங்கு உச்சம் பெறக் கூடாது.  வசதிக்காக அதிக கடன் எற்பட்டு அதிக கஷ்டத்தை கொடுக்கும்.  வரும் வருமானம் வியாதிக்காக விரயமாகும்.

 6. ஒன்பதாம் அதிபதியும் பதினோராமாதியும் பரிவர்த்தனை ஆனால் அரசங்கத்தால் லாபமும், பொருளாதாரத்தில் வெற்றியும், சந்தோஷமான குடும்பமும் அமையும். சிலர் அரசில் உயர் பதவியில் அமரும் பாக்யம் கிடைக்கும். அரசாங்கத்தில் கெளவரமும் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.

7. பத்தாமாதியும் பதினோராமாதியும் தொடர்பு கொண்டால் நல்ல நண்பர்கள், அதிக சம்பாத்தியம், அரசியிலில் வெற்றி, பணக்காரர்களின் தொடர்பு ஏற்படும். செய் தொழிலில் நல்ல வெற்றி உண்டாகும். மேஷ லக்னத்திற்க்கு இந்த பலன் பொருந்தாது.

 8. ஒன்பதமாதி, பத்தாமாதி பதினோராமாதியும் தொடர்பு கொண்டால் தொழிலில் நல்ல லாபமும், வேலையில் முன்னேற்றமும், நல்லவர்களின் நட்பும், பெரிய பணக்காரர்களின் நட்பும் கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதையும், மதிப்பும் கிடைக்கும். 

 9. ஐந்தாமாதி, பத்தாமாதி , பதினோராமாதியும் தொடர்பு கொண்டால் நல்ல உயர்ந்த படிப்பும், நல்ல குழந்தைகளும் உண்டாகும், உயர்ந்தவர்களின் நட்பும் கிடைக்கும். குழந்தைகளால் குடும்பம் வளர்ச்சி அடையும்.  குழந்தைகளில் ஒருவர் வெளிநாட்டில் இருப்பதற்கு வாய்ப்புண்டு.

10.  பனிரெண்டாமாதியும் பதினோராமாதியும் தொடர்பு கொண்டால் தன் லாபத்தை தானே விரயம் செய்வான்.  சிற்றின்பத்தில் அதிக நாட்டம் இருக்கும்.  உல்லாச பயணங்களுக்காக அதிகம் செலவு செய்வார்கள். 


…………………..அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.
பத்தாம் பாவம் சம்பந்தப்பட்ட முக்யமான கிரஹ சேர்க்கைகளும் அதன் பலன்களும்.

எபோதுமே  ஒரு விதியை பின்பற்றுகிறபோது அந்த விதி அந்த பாவம், அதன் அதிபதி அதனை பார்க்கும் கிரஹம் ஆகியோருக்கு பொருந்துகிறதா என பார்க்கவேண்டும்.  ஒரு பாவத்தின் வலுவை நிர்ணயம் செய்யும் போது, அந்த பாவத்தில் ஒரு நீச்ச கிரஹம் இருக்க கூடாது. அந்த பாவம் வலு இழக்கும். அதேபோல் அந்த பாவதிபதி ஒரு நீச்ச கிரஹத்தோடு சேரக்கூடாது. அந்த கிரஹம் வலு இழக்கும்.  ஒரு நீச்ச கிரஹம் பார்க்ககூடாது. பலனை தருவதில் சிக்கல் இருக்கும். பத்தாம் பாவத்தில் ராகு இருந்து அது நீர் ராசியாக இருந்தால் அந்நிய தேசத்தில் வேலை வாய்ப்புகளும்,  தொழில் வாய்ப்புகளும் வரும். 
 1.  இரண்டாமதிபன் ஐந்தாமதிபன் சேர்ந்து பத்தில் இருந்தால் பொருளாதார உயர்வும், எல்லா காரியங்களிலும் வெற்றியும் இருக்கும். பிள்ளைகளால் தன வரவு இருக்கும். ரேஸ், லாட்டரி, பங்கு வர்த்தகம் , அதாவது யூக வருமானங்கள் அதிகம் இருக்கும்.  

 2.  இரண்டாமதிபன் ஒன்பதாமதிபன் சேர்ந்து பத்தில் இருந்தால் செய் தொழிலில் அதிர்ஷ்டமும், கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபமும் இருக்கும்.  ஒன்பதாம் இடம் இரண்டுக்கு எட்டாமிடம் ஆக வருவதால் குடும்ப உறுப்பினர்களின் வற்புற்த்தலுக்கு ஏற்ப ஜாதகர் தன் தந்தையில் சொத்தை பிரித்து வாங்கிச் செல்வார்.  தந்தை மகன் பிரிவு வரவும் வாய்ப்பு உண்டு.

 3.  பனிரெண்டாமதிபனும், பத்தாமதிபனும் பரிவர்த்தனையானால் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளும் தோல்விகளும், தடை, தடங்கல்களும், கஷ்டங்களும் ஏற்படும்.  அடிக்கடி வேலை மாறுதல் உண்டாகும்.  அடிக்கடி தொழிலை மாற்ற வேண்டிய சூழல் வரும்.  

 4.  பத்தாமதிபனும் பதினோராமதிபனும் பரிவர்த்தனையானால் நல்ல நண்பர்கள் தொடர்பும், தொழிலில் லாபமும், நல்ல உயர்வும், முன்னேற்றமும் ஏற்படும்.  அதேசமயம் மூத்த சகோதரரால் சில நஷ்டங்களும் ஏற்படும். சில பேருக்கு லக்னாதிபதி பலமில்லாமல் இருந்தால் , கூட்டுத் தொழ்லில்  நண்பனே லாபத்தை எடுத்துச் செல்வான்.  இந்த பலன் கடக லக்னத்தாருக்கு கண்டிப்பாக இருக்கும்.  சில ஜாதகர் தன் சுகத்திற்காக தன் தாயை பிரிவார்கள்.

5.  லக்னாதிபதியும், பத்தாமதிபதியும் பரிவர்த்தனை யானால் உத்யோகத்தில் வெற்றியும், நல்ல தொழிலும் அதில் வெற்றியும் இருக்கும்.  மேஷ லக்னத்திற்கு இந்த பலன் சரியாக வராது.

6.  பத்தாமதிபதி ஏழாமாதி பரிவர்த்தனை ஆனால் கூட்டு தொழிலில் வெற்றியும், நல்ல உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தில் அன்யோன்யம் இருக்கும்.  சில பேருக்கு மாமனார் தொழிலை ஏற்று நடத்தக் கூடிய வாய்ப்பு வரும். வீட்டோடு மாப்பிள்ளையாக போகும் யோகம் வரும். மிதுன லக்னம்,  தனுசு லக்னத்திற்கு இந்த பலன் வராது.

7.  எட்டாமாதி பத்தாமாதி பத்தில் இருந்தால் செய் தொழில் சரியாக வராது.  சில சமயம் தன் தொழில் விருத்திக்காக, முறை தவறிய வழிகளில் கடன் பெற்று சிறை ஜீவனம் ஏற்படும்.  இந்த அமைப்பில் ராகு சம்பந்தப்பட்டால், தொழில் போட்டியால், சில சமயம்  பங்கு தாரரின் இறப்பிற்க்கு ஜாதகரே காரணமாக இருப்பார்.

8.  இரண்டாமாதி, ஏழாமாதி பத்தாமாதி சேர்க்கை பத்தில் இருந்தால் தொழிலில் நல்ல லாபம் இருக்கும்.  துணையால் நல்ல வருமானம் ஏற்படும்.  ஆனால் இது சில லக்னங்களுக்கு மாரக ஸ்தானமாக இருப்பதால் (2,7)  அதன் தசா புத்திகளில்  பத்தில் ஏதேனும் கிரஹம் கெட்டு இருந்து கோசாரத்தில் தொடர்பு ஏற்படும் போது தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்யும் மன நிலை வரும். இந்த அமைப்பில் சந்திரன் கெட்டு கேதுவோடோ, மாந்தியோடோ சேரக்கூடாது.

9.  பத்தாமாதியும் ஆறாமாதியும் பரிவர்த்தனையானால் தந்தைக்கு இரண்டு குடும்பங்கள் இருக்கும்.  சொத்து பிரச்சனைகள் அதிகம் வரும். 

10. லக்னாதிபதி, நான்காமாதி, பத்தாமாதி தொடர்பு இருந்தால் ஜாதகனுக்கு பிற பெண்கள் சேர்க்கை இருக்கும். சந்தோஷம் இருக்கும். 

11.   பத்தாமாதி, லக்னாதிபதி, ஐந்தாமாதி, ஏழாமாதி பரிவர்த்தனை வாழ்க்கையில் அதிக முன்னேற்றம் , ஆதிக்கம், புகழ் ஆகியவை கிடைக்கும்.  மனைவி வழியில் சொத்துக்கள் ஜாதகரின் பிள்ளைகளுக்கு வந்து  சேரும் . 

12.  ஐந்தாமாதி, ஒன்பதாமாதி பத்தாமதியோடு தொடர்பு கொண்டால் அரசனுக்கு சமமான வாழ்வும், நல்ல புகழும் ஏற்படும்.  அடிக்கடி யாத்திரைகள் செய்வான்.  புண்ணிய சேத்திரங்களை தரிசனம் பண்ணும் பாக்கியம், புண்ணிய நதிகளில் நீராடும் பாக்கியம் ஆகியவை ஏற்படும்.

13.  பத்தாமாதி, பதினோராமாதி மற்றும் ஒன்பதாமதியோடு தொடர்பு கொண்டால் அரசு மரியாதைகளும், எல்லா காரியங்களிலும் ஒழுக்கமும் நேர்மையும் இருக்கும்.  நல்ல புகழ் கிடைக்கும்.   



ஒன்பதாம பாவம் சம்பந்தப்பட்ட முக்யமான விதிகள்

1. இரண்டாமதிபன், ஐந்தாமதிபன் சேர்ந்து ஒன்பதில் இருந்தால் நல்ல தனப்ராப்தி இருக்கும். புத்திசாலிதனத்தால் வருமானத்தை பெருக்குவார்கள்.  பிள்ளைகளால் நல்ல தனப்பிராப்தி இருக்கும்.  பாரம்பரிய சொத்துக்கள் மூலம் வருமானம் வரும்.

2. இரண்டாமதிபன் பத்தாமதிபன் சேர்ந்து ஒன்பதில் இருந்தால் நல்ல பொருளாதார முன்னேற்றமும், பணம் சம்பாதிப்பதில் வெற்றியும் பெறுவார்கள். பணத்தின் மூலமாக பணத்தை பெருக்குவார்கள்.  தந்தை மூலம் தன்ப்பராப்தி வரும்.

3. ஐந்தாமதிபன் ஒன்பதில் இருந்தால் குழந்தைகளுக்கு முன்னேற்றமும், அவர்களால் குடும்ப மகிழ்ச்சியும் இருக்கும். பிள்ளைகள் பங்கு வர்த்தகத்தின் மூலம் அதிகமாக சம்பாதிப்பார்கள். சில சமயம்  தாத்தாவின் தொழிலை பேரன் தொடர்ந்து செய்வான்.

4. பத்தாமதிபன் ஒன்பதில் இருந்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  ஆனால் உத்யோகத்தில் நல்ல பயன் பெற முடியாது. இவர்கள் இருவரும் பரிவர்த்தனை ஆனால் சொத்து சேரும், நிலத்தால் நல்ல வருமானம் கிடைக்கும், திடீர் பணவசதிகள் வரும், பெரிய மனிதர்கள் சந்திப்பு கிடைக்கும்.

5. ஏழாமதிபன் ஓன்பதாமதிபன் பரிவர்த்தனை ஆனால் வாழ்க்கையில் அதிர்ஷடம் இருக்காது. சில சமயம் மனைவியின் வீம்பான போக்கால் மண வாழ்க்கையில் போராட்டம் இருக்கும். 

6. நான்காம் அதிபதி, ஒன்பதாமதிபதி பரிவர்த்தனை ஆனால் நல்ல அந்தஸ்து, அதிகார பதவி, நல்ல தனம், குடும்ப உறுப்பினர்களின் உதவிகள் கிடைக்கும்.

7. எட்டு, ஒன்பதாம் அதிபதிகள் பரிவர்த்தனை ஆனால் வாழ்க்கையில் தோல்வி, பெரும் ஏற்ற இறக்கம், கஷ்டங்கள், ஏற்படும்.  தந்தையால் ஆதாயம் கிடைப்பது கஷ்டம். 
 
8. லக்னாதிபதி ஒன்பதாமதிபதி தொடர்பால், நல்ல பேச்சு திறமையும் நல்ல அதிர்ஷ்டமும், சமூகத்தில் வெற்றியும், நல்ல அதிர்ஷ்டசாலி பெண் குழத்தைகளும் கிடைக்கும்.  இவர்கள் நல்ல நட்பு நக்ஷத்திர சாரத்தில் நின்றால் தந்தைக்கும் மகனுக்கும் மிகுந்த ஒற்றுமை இருக்கும்.

9. ஆறாமதிபதி, ஒன்பதாமதிபதி தொடர்பு பெற்றோருக்கு கஷ்டமும், காரிய தடையும், சமூகத்தில் இறக்கமும், இருக்கும்.  மரம், கல் சிமெண்ட், நிலக்கரி, மணல் வியாபாரம் செய்தால் சிறப்பு.

10. இரண்டாமதிபன், ஒன்பதாமதிபன் பரிவர்த்தனை நல்ல உடல் வாகும், நல்ல பண வசதியும், வாழ்க்கையில் அந்தஸ்து, முன்னேற்றம் இருக்கும்.

11. மூன்றாஅதிபதி, ஒன்பதாம் அதிபதி பரிவர்த்தனை இருந்தால் சொத்து அழியும், வாழ்க்கையில் துக்கங்கள் மிகும்,  மணக்கணக்குகள் பொய்யாகும், பணக்கஷ்டம் அதிகம் இருக்கும்.  இளைய சகோதரன் மனைவியால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும்.

12. பனிரெண்டாமதிபனும் ஒன்பதாம் அதிபனும் தொடர்பு கொண்டால் புண்ய தலங்களை தரிசிக்கும் பாக்யமும் , புனித நதிகளில் நீராடும் பாக்யமும் ஏற்படும்.


13. நான்காமதிபன், ஆறாமதிபன் சேர்ந்து ஒன்பதில் இருந்தால் தந்தைக்கும் ஜாதகருக்கும் ஒத்து வராது.  சண்டை சச்சரவுகள் இருக்கும்

Monday 6 March 2017

எட்டாம் பாவம் சம்பந்தப்பட்ட முக்கியமான விதிகள்

 1.  எட்டாமாதியும், லக்னாதிபதியும் சேர்ந்து எட்டில் நின்றால் வேலையில் சரியான வருமானம் இருக்காது.  கூட்டு தொழில் ஆகாது.  தனி வியாபாரம் நல்லது.  இங்கு இரண்டாமாதியும் சேர்ந்து நிற்க  சில சமயங்களில் தனக்கு ஏற்படும் தடை தாமதங்களை கண்டு வாழ்வில் விரக்தி ஏற்பட்டு அவசரப்பட்டு விபரீதமான முடிவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புண்டு.

 2.  எட்டில் லக்னாதிபதி இருந்தாலோ, பரிவர்த்தனை ஆனாலோ, சூதாட்டத்தில் விருப்பம், குதிரை பந்தயத்தில் ஆர்வம், பிறர் பெண் மீது நாட்டம், திருட்டு புத்தி இருக்கும். தீர்க்காயுள் உண்டு.  தன் கஷ்டங்களுக்கு தானே காரணமாவான்.   மேஷ லக்னத்திற்க்கு இது பொருந்தாது.

 3.  11ம் ஆதியும் 8ம் ஆதியும் தொடர்பு கொண்டால் தீடிரென்று நெருங்கிய நண்பர் மரணமடையலாம்.  இவர்கள் இரண்டாம் இடத்தில் சேர்க்கை பெற்றால், நண்பர்களின் சொத்தை ஜாதகர் பராமரிக்கும் நிலை ஏற்படும். ரிஷப லக்னத்திற்கு இது பொருந்தாது.

 4.  9ம் ஆதியும் 8ம் ஆதியும் தொடர்பு கொண்டால் எதிர்கால சிந்தனை அதிகம் இருக்கும்.  மதத்தின் மீது அதிக பற்று இருக்காது.  தந்தையின் மரணத்திற்கு பிறகு உயில் மூலம் சொத்து கிடைக்க வாய்ப்புண்டு.  சொந்த சமூகத்தில் மரியாதை இருக்காது.  சில சமயம் தன் மதத்தில் இருந்து வேறு மதம் மாரக்கூடிய நிலை ஏற்படும்.  மிதுன லக்னத்திற்கு இது பொருந்தாது.

5.  3ம் ஆதியும் 8ம் ஆதியும் சேர்ந்து எட்டில் இருந்தால் ஆன்மீகத்தில் நாட்டம் வரும்.  சொந்த இரத்த சம்மந்தமுள்ளவர் இறப்பால் அவரின் சொத்து இவருக்கு வரும்.  துக்கம் விசாரிக்க செல்லும் போது ஜாதகருக்கு விபத்து ஏற்படலாம். பரிவர்த்தனை பெற்றால் தீர்க்காயுள். சகோதரர்களுக்குள் ஒற்றுமை இருக்காது.  கன்னி லக்னத்திற்கு இது பொருந்தாது.  ஆனால் இந்த லக்னத்திற்கு மூன்றுக்கும் எட்டுக்கும் உடைய செவ்வாய் உச்ச மடைந்தால் இவர்கள் நில சம்மந்தமான வியாபரம் செய்தால் அதிகமாக வில்லங்கத்தில் சிக்குவார்கள்.

 6.  4ம் ஆதியும் 8ம் ஆதியும் சேர்க்கை பெற்றால் அதுவும் 8ல் இருந்தால், ஆரோக்யம் நன்றாக இருக்கும்.  தன வசதி இருக்கும்.  ஆண் வாரிசு வருவதற்கு வாய்ப்பு குறைவு. 

 7.  5ம் ஆதி 8ம் ஆதி தொடர்பு, நல்ல பணவசதி, ஆனால் நிலையில்லாத மனம். பரிவர்த்தனை பெற்றால் பிள்ளைகளுக்கு கஷ்டம்.  சிம்ம லக்னத்திற்க்கு இது பொருந்தாது.

 8.  12ம் ஆதியும் 8ம் ஆதியும் பரிவர்த்தனை பெற்றால் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள்.  அவனே எட்டில் இருந்தால் மறைமுக அதிக செலவுகள்.  தனிக்காட்டு ராஜா.  வாழ்க்கையில் திடீர் உயர்வு.

 9.  4ம் ஆதியும் 7ம் ஆதியும் எட்டில் நின்றால் நல்ல ஆரோக்யம், நல்ல தனம் ஆனால் வாரிசு இருப்பது கஷ்டம்.  ஜாதகன் தன் துணைக்கும்  தாய்க்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளால் மனம் வெறுத்து போகும் சூழ் நிலை வரும்.  ஜாதகனின் தாய் தன் மருமகளை வெறுப்பாள்.  தன் மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க விரும்புவாள்.  மூலை லக்னங்களான , கன்னி  ,  மீனம் ஆகியவைகளுக்கு களத்திர சுகத்தை கெடுத்து தார தோஷத்தை ஏற்படுத்தும்.

10.  6ம் ஆதி 8ல் இருதால், நோய் அதிகமாகும். நீடித்த நோயால் கஷ்டப்படுவார்கள்.  பண வசதி இருந்தும் அதை அனுபவிக்க முடியாத  நிலை இருக்கும்.

11.  7ம் ஆதி எட்டில் தொடர்பு கொண்டால் துணைக்கு ஆகாது.  தன் மறைமுக தொடர்புகளுக்கு அதிகம் செலவழிப்பான்.  கடக லக்னத்திற்கு இது பொருந்தாது.  மேஷ லக்னத்திற்கும், துலா லக்னத்திற்கும் இரண்டுக்கு ஏழுக்கும் உடையவர் ஒருவரே ஆவதால், அவர் எட்டில் மறைந்தால்  திருமணத்திற்கு பிறகு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். சில சமயங்களில் திருமண முறிவு ஏற்படலாம். 
  
12.   5ம் ஆதியும் 10 ஆதியும் சேர்ந்து எட்டில் நின்றால், புத்ர தோஷம், தீராத கஷ்டம். அப்படி, பிள்ளைகள் இருந்தால், அவர்கள் ஜாதகனை வயதான காலத்தில் கவனிக்க மாட்டார்கள்.  கடக லக்னதிற்கு  ஐந்துக்கும் பத்துக்கும் உடைய செவ்வாய் யோக காரகான இருப்பதால் நல்ல பலனாக அமைய வேண்டும். ஆனால் ஜாதகருக்கு அந்த யோகம் அமைவது தடைபடும்.

13.  4ம் ஆதியும், 5ம் ஆதியும் எட்டில் நின்றால் பிள்ளைகளுக்கு நோய் உண்டாகும்.  சொத்தில் வில்லங்கம் ஏற்படும்.    துலாம் லக்னத்திற்கு நான்கிற்கும் ஐந்திற்கும் உடைய சனி எட்டில் நிற்கும் போது இந்த பலன் இல்லை. ஆனால் ஜாதகரின் தாய்க்கு நோயின் தாக்கம் இருக்கும்.  பிள்ளைகளால் சில கஷ்டங்களை சந்திப்பார்கள்.

14.  9ம் ஆதியும் 10 ஆதியும் சேர்ந்து 8ல் நின்றால் தாய் தந்தைக்கு கஷ்டம், பூரிவீக நிலச் சொத்தில் வில்லங்கம் ஏற்படும்.   ரிஷப லக்னத்திற்கு இருவருமே ஒருவராக இருப்பதால் இந்த பலன் இல்லை.  ஆனால் ஜாதகர் தந்தைக்கு கர்மம் செய்வதில் பிரச்சனை ஏற்படும்.  அல்லது அந்த சமயத்தில் தந்தையில் அருகில் இல்லாமல் போக நேரிடும்.

15.  2ம் ஆதி 8ம் ஆதி தொடர்பு ஏற்பட அதிக செலவுகள் ஏற்படும். துணை மூலம் கஷ்டங்கள். மனைவி அதிக செலவாளியாக இருக்கு வாய்ப்புண்டு.   மேஷத்திற்கும், துலாதிற்கும் இந்த பலன் கண்டிப்பாக இருக்கும்.

16.  2க் குடையவனும் 11க் குடையவனும் சேர்ந்து 8ல் நின்றால் பொருளாதாரத்தில் தடையும் பணக்கஷ்டமும் ஏற்படும். குடும்ப வறுமை காரணமாக அதிக கடன் வாங்கி அதை கட்ட முடியாமல் கஷ்டப்படுவார்கள்.  மேஷ லக்னத்தார்க்கு இது அதிகமாக இருக்கும். 11ம் அதிபதி பாதகாதிபதிதானே அவன் மறையலாமே என்று கேட்பார்கள்.  ஆனால் அவன் விருச்சிகத்தில் அமராமல் இருப்பது நல்லது.  அதுவும் போக காரகனும் சனிக்கு யோக காரகனும் ஆன சுக்ரனோடு சேர்ந்து எட்டில் அமர்வது நல்லதல்ல்.

17. லக்னாதிபதி,  4ம் அதிபதி, 9ம் அதிபதி சேர்ந்து எட்டில் நின்றால் வாழ்க்கையில் வறுமை அதிகமாக இருக்கும்.  சுகத்தை அனுபவிக்க முடியாது.  பாரம்பரிய சொத்துக்களை கடனுக்காக இழக்க வேண்டிவரும். 

18.  4ம் அதிபதி  மட்டும் எட்டில் நின்றால் சொந்த வீட்டை இழக்க நேரிடும். சில பேர் சொந்த வீடு வைத்து இருந்தாலும் அதில் வசிக்க முடியாது.  வாடகை வீட்டில் தான் வசிக்க நேரிடும்.  அப்படியே சொந்த வீட்டில் வசித்தாலும் நிம்மதி இருக்காது.

19.  8ம் அதிபதி நான்கில்  இருந்தால் பரம்பரை நோய் உடம்பில் இருக்கும்.  அது தசா புத்திகளில் தாக்க வாய்ப்புண்டு.  என்றோ காணாமால் போன பொருள் ஒன்று கையில் கிடைக்க வாய்ப்புண்டு.  பாரம்பர்யத்தில் தொலைத்த, கைவிட்டு போன சொத்து அல்லது விலைமதிக்க முடியாத புதையலுக்கு சமமான விஷயங்கள் கைக்கு எட்டும்.

20.பொதுவாகவே எட்டாம் இடம் என்பது எல்லோருக்குமே  கஷ்டத்தை தரும் இடம்.  நீடித்த அதாவது தீராத நோய், தடை தாமதம், வறுமை,விரக்தி இவைகளை தரும் இடமாக இருக்கிறது.  எட்டாம் இடத்துக்காரன் எட்டில் நின்றாலும்,  அல்லது அந்த இடத்துக்கு காரகர் சனி அங்கு நின்றாலும் காரக பாவ நாஸ்தியை தரமாட்டார் .  பூரண ஆயுள் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது . ஆயுளை நீட்டித்தாலும்,  கடைசி வரை நோயில்லாத வாழ்க்கை தானே நிம்மதியான வாழ்க்கை.  ஆயுளை நீட்டித்து, நோயின் பிடியில் சிக்கி கட்டிலில் கிடந்து எல்லாவற்றிற்கும் அடுத்தவர் உதவியை நாடி வாழ்வது ஒரு வாழ்க்கையா. அதற்காக பூரண ஆயுள் தேவையில்லை என்று சொல்லவில்லை.  தீர்க்கமான ஆயுளும் தேவை.  நோய் நொடி இல்லாத வாழ்க்கையும் தேவை.

பூர்வ புண்யத்தை ஐந்தாம் பாவம் சொன்னாலும் அதனுடைய நான்காவது கேந்திரமான எட்டாமிடம் பூர்வ பாபத்தை சொல்லும்.  அதாவது கர்ம வினைகளை சுட்டி காட்டும் இடம்.
எட்டு என்பது, டெஸ்டினி நம்பர் என்று சொல்வார்கள். எங்கு ஆரம்பிக்கிறது எங்கு முடிகிறது என்பதை கண்டு பிடிக்க முடியாத எண்.  வாழ்க்கையும் அப்படிதான் எங்கு ஆரம்பிக்கிறது எங்கு முடிகிறது என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது.   எட்டில் இருக்கும் அல்லது பார்க்கும், அல்லது அதன் அதிபதி, அவரை பார்க்கும் கிரஹங்களை வைத்து  நம் வாழ்க்கையின் அல்லல்களை தீர்மானித்து, அதை களைய நம் முன்னோர்கள் வழிபட்ட குல தெய்வங்களை தொழுது அதை போக்கி கொள்வோம்.  அந்த காலத்தில்  பூட்டெல்லாம் பார்த்தீர்கள் என்றால் இரும்பில் கருப்பாக எட்டு வடிவில் இருக்கும். அதனால் தான் எட்டின் தாக்கத்தை போக்க கருப்பு தெய்வங்கள் நம் பாதுகாப்பிற்காக வந்து நிற்கும் என்று சொல்வார்கள்.  நாம் வீட்டில் சேர்த்து வைத்த எல்லா பொருட்களுக்கும் காவலாக ஒரு பூட்டு காவலாக இருந்து பாதுகாக்கும் போது, நம் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கெளுக்கெல்லாம் காவலாக அந்த காவல் தெய்வங்கள் இருந்து நம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு, எட்டாமிடத்தை பற்றி கவலை படாமல் குல தெய்வ வழிபாட்டை செய்து வாழ்க்கையை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டுகிறேன்.


 



ஏழாம் பாவம் சம்பதப்பட்ட முக்யமான விதிகள்

 1.  ஏழாம் பாவத்தில் மூன்று, பனிரெண்டு அதிபதிகள் சேர்ந்து இருந்தால் விசுவாசுமுள்ள நன்னடத்தையுள்ள அழகிய மனைவி அமைவாள்.

 2.  ஆறு பனிரெண்டாமாதிகள் சேர்ந்து 7ல் இருந்தால் உடலில் நோய் இருக்கும்.  பெற்றோருக்கு பாரமாக இருக்க நேரிடும். வழக்குகள் ஜாதகனுக்கு சாதகமாக இருக்காது.  எதிலும் தோல்விதான்.

 3.  ஏழாம் பாவத்தில் லக்னாபதியும் பனிரெண்டாமாதியும் இருப்பது திருமண வாழ்க்கையை பாதிக்கும். 

 4.  ஏழாமாதியும் ஐந்தாமாதியும் பரிவர்த்தனை பெற்றாலோ, சேர்ந்தாலோ திருமண வாழ்க்கை பாதிக்கும்.  புத்ர தோஷம் ஏற்படும்.  மனைவியை பிரிய நேரிடும்.   மனைவி அடிக்கடி பிரிந்து தாய் வீடு செல்வாள். பிறரின் தலையீடு இருக்கும்.

 5.  ஏழாமாதியும் நாலாமதிபதியும் பரிவர்த்தனை , சேர்தல்,தொடர்பு கூடாது.  பரம்பரை சொத்து அழியும்.

 6.  ஏழாமாதியும் ஆறாமாதியும் தொடர்பு கொண்டால்  தைரியம், துணிச்சல் இருக்கும், ஆனால், மலட்டு தன்மை வரலாம்.  வரும் துணைக்கு நோய் இருக்கும். வரும். பரிவர்த்தனை பெற்றால் வெளி நாட்டு வாசம் ஏற்படும்.

 7.  5ம் அதிபதி 7ல் இருந்தால் தன் முதலாளிக்கு விசுவாசமாக இருப்பான். தைரியம் இருக்கும்.

 8.  ஏழாமாதி இரண்டாமாதி தொடர்பு அல்லது இரண்டாமிடம் தொடர்பு துணையால், தன விருத்தி ஏற்படும்.
 
 9.  லக்னாதிபதியும் ஏழாமாதியும் பரிவர்த்தனை அடைந்தால் அரசாங்கத்தால் உதவி, பண வரவு, பாராட்டு, பத்திரங்கள் கிடைக்கும், நல்ல லாபம் ஏற்படும் ஆனால் வாக்கில் நாணயம் இருக்காது.

10.  ஏழாமாதி எட்டாமாதி தொடர்பு ,  தோலில் வியாதி ஏற்படும்,  இருதாரம் ஏற்பட வாய்ப்புண்டு.

11.  ஏழாம் பாவத்தில் 2,4ம் ஆதிகள் சேர்க்கை பெற்றால் முன்னேற்றமும், பல துறைகளில் சாதிக்கும் திறமையும், பல மொழி படிக்கும் திறமையும் இருக்கும்.  ஆனால் பரம்பரை சொத்து அழியும்.

12.  9ம் ஆதியும், 7ம் ஆதியும் தொடர்பு கொண்டால் புகழும், சமுதாயத்தில் மதிப்பும் கிடைக்கும்.  இவர்கள் பரிவர்த்தனை ஆனால் திருமணத்திற்கு பிறகு  உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். 

13.  பனிரெண்டாமாதி  ஏழாமாதி தொடர்பு அதிக ஸ்தீரி போகத்தால் உடலில் நோய், பணக் கஷ்டம்.

14.  ஏழாமாதியும், மூன்றாமாதியும் பரிவர்த்தனை பெற்றால்  வீண் வதந்திகள் செய்வது, காரியத்தில் தடை எற்படுவது, மோசமான நடத்தையும் இருக்கும்.

15.  ஏழாமாதி, இரண்டாமாதி, பத்தாமாதி தொடர்பு பாபர்கள் சேர்க்கை பெற்றால் அதிக பெண் போகம் ஏற்படும்.

16.  ஏழாமாதி, 3,6,10,11ம் ஆதிகளோடு தொடர்பு கொண்டால் திருமணத்திற்கு பிறகு அதிக தனலாபம் இருக்கும்.

17.  ஏழாமாதி லக்னத்தோடு தொடர்பு கொண்டால், களத்திரம் கை ஒங்கும்.  அடிமைதனமான வாழ்க்கை ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்படும்.

18.  ஏழாமாதி 2,5ம் ஆதியோடு தொடர்பு கொண்டால் தீர்க்கமான முடிவு எடுக்கும் தன்மையும், எதிலும் உண்மையான எண்ணமும், பிறருக்கு உதவி செய்யும் குணமும் இருக்கும். 

19.  ஏழாமாதி பாபகிரஹத்தோடு சேர்க்கை பெற்று  செவ்வாயின் பார்வையில் இருந்து இரண்டில் இருந்தால் அடுத்தவர் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மை வரும்.

20.  ஏழாம் அதிபதி பாவர் சேர்க்கை பெற்று 2, 7 ல் நின்று  சுபர் பார்வை பெறாமல் இருந்து பதினோராம் இடமும் வலுத்து இருந்தால் இருதார யோகம் கண்டிப்பாக உண்டு.

21.  மகர , கடக,  சிம்ம லக்னகாரர்களுக்கு  2,7ம் அதிபதிகள்  பகைவர்கள்.  அவர்கள் எந்த வீட்டிலும் சேர்ந்து இரூக்க கூடாது. அப்படி இருந்தால் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.

22.   சுக்ரன், குரு, செவ்வாய் சேர்ந்தோ, தனித்து  சுபர் பார்வை இல்லாமல் இருந்தால் அந்த பாவ காரகத்துவம் சார்ந்த விஷயங்களினால் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படலாம்.
23. செவ்வாய்க்கு ஏழில் குரு அல்லது சுக்ரன் தனித்து நிற்பது தம்பதிகளுக்குள் மன வேற்றுமையை ஏற்படுத்தும்.

24.  ஆண் ஜாதகத்தில் ஏழில் சுக்ரன் களத்திர தோஷம்.  பெண் ஜாதகத்தில் ஏழில் குரு இருந்தால் களத்திர தோஷம்.  அதேபோல் பெண் ஜாதகத்தில் சுக்ரன் ஏழில் இருந்தால் அவள் கணவன் வீட்டை சார்ந்த பெண் வழியில் பிரச்சனை ஏற்படும்.


25.  ஏழாம் அதிபதி சுக்ரன் கூடி நிற்க லக்னாதிபதி ஏழில் நிற்க , இரண்டாம் அதிபதி உச்சம் பெற்று இவர்களை குரு பார்த்தால்  இவர்களுக்கு அமையும் துணை நல்ல புத்திசாலியாகவும், கணவனை தெய்வமாக மதிக்கும் குணமுடையவளாகவும்,  இருந்து குடும்பத்தின் பெருமையை உயர்த்துவாள்.
ஆறாம் பாவம் சம்பந்தப்பட்ட முக்கியமான விதிகள்

1. மூன்றாம் அதிபதியும் ஆறாமதிபதியும் சம்பந்தப்பட்டால் திடீர் பணவரவு வரும்.

2.  2ம் அதிபதியும் 6ம் அதிபதியும் சம்பந்தப்பட்டால் பண நஷ்டமும், எதிரிகள் மூலம் விரயம் ஏற்படும். சுயமான முயற்ச்சியில் வெற்றி கிடைக்காது. 

3.  6ம் அதிபதியும் 7ம் அதிபதியும் தொடர்பு கொண்டால் திருமண தடை, கணவன் அல்லது மனைவியின் உடல் நலம் கெடலாம்.  குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.  தன்னை விட வசதி குறைவான இடத்தில் திருமணம் ஆகும்.  காதல் தோல்வி ஏற்படலாம்.  தன் கீழ் வேலை பார்பவர்களுடன் விரோதம் ஏற்படும்.   விவாரத்து ஏற்படலாம்.

4.  லக்னாதிபதி 10அதிபதி 6ம் அதிபதி தொடர்பு அரசு உத்யோகம் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் பரிவர்த்தனை கூடாது.  வேலை இழப்பு , பெற்றோர் பகை, கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

5.  6ம் அதிபதியும் லக்னாதிபதியும் தொடர்பு கொண்டால் கடன், வறுமை, இதோடு சுக்ரன் தொடர்பு கொண்டால் இரண்டு விவாகம் ஏற்படும்.  உடலில் அடிக்கடி நோய் ஏற்படும்.

6.  6ம் அதிபதியும் 10 அதிபதியும் தொடர்பு கொண்டால் வேலைக்கு போவது மேல்.  அதனால் நன்மைகள் ஏற்படும்.  ஆனால் வியாபாரம் செய்தால் நஷ்டம் ஏற்படும். 

7. 6ம் அதிபதியும் 11ம் அதிபதியும் தொடர்பு கொண்டால் பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும்  வியாபாரத்தில் லாபமும், குடும்பத்தில் அமைதியும். சுகமும் கிடைக்கும்.   ஆனால் 6ம் ஆதி இங்கு உச்சமாக கூடாது.  அதிக கடன் ஏற்படும்.

8.  9மதிபன், 10ம் அதிபன் சேர்ந்து 6ல் நின்றால் அரசாங்க உத்யோகத்தில் ஆதாயம் உண்டு.

9.  6ம் அதிபன், 7ம் அதிபனோடு அல்லது 8ம் அதிபனோடு பரிவர்த்தனை ஆதல் கூடாது.  குடும்பம் அமைவது கஷ்டம்.   தனிமை வாழ்க்கை வாழ நேரிடும்.

10.  9ம் அதிபதி 6ம் அதிபதி பரிவர்த்தனை தன நாசம் ஏற்படும்.

11.  5ம் ஆதி, 10 ஆதி சேர்ந்து 6ல் நின்றால் நல்ல ஆரோக்யமும்,  எதிலும் வெற்றியும், பெயர், புகழ், குடும்ப மேன்மை, சொத்துக்கள் சேரும்.

12.  5ம் ஆதி, 6ம் ஆதி பரிவர்த்தனை கூடாது.  எதிரிகள் தொல்லை, மன சஞ்சலம், எதிலும் தடை, யாரோடும் ஒத்துப் போகும் குணம் இல்லாமை எற்படும்.  தொடர்பு, பிள்ளையே விரோதி.

13.  4ம் அதிபனும், 6ம் அதிபனும் தொடர்பு கொண்டால், வாகனத்தால் விபத்து ஏற்படும். சொத்துக்கள் விரயமாகும்.

14.  3ம் அதிபனும் 6ம் அதிபனும் தொடர்பு கொண்டால் சகோதரனுக்கு நல்லதல்ல.

15.  லக்னாதிபதி 6ல் பலமானால் போட்டி, பந்தயங்களில் வெற்றி, உயர்ந்த அந்தஸ்த்து, கிடைக்கும்.

16.  லக்ன பாதகாதிபதியும், 6ம் அதிபதியும் பரிவர்த்தனை ஆனால் பிளாக் மேஜிக் என்ப்படும் மந்திர தந்திரங்களில் ஆர்வம் ஏற்படும்.



-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
     ஐந்தாம் பாவம் சம்பந்தப்பட்ட முக்கியமான விதிகள்

1.   5ம் அதிபதியும் லக்னாபதியும் பரிவர்த்தனையானால் மிகவும் அறிவு சார்ந்த புத்திசாலியாக இருப்பான்.  புத்திசாலிதனத்தால் எல்லோரையும் ஜெயிக்க வல்லவன்.

2.   ஐந்தாம் அதிபதியும் மூன்றாம் அதிபதியும் பரிவர்த்தனையானால் வாழ்க்கையில் பல ஏற்ற தாவுகள் இருக்கும்.  ஆனால் 3ம் அதிபதி 5 ல் இருந்தால் பல வழிகளில் பணம் சம்பாதிக்கும் திறமை இருக்கும்.   ஆனால் மனைவி இவனை மதிக்கமாட்டாள்.

3.   4ம் அதிபதியும் 5ம் அதிபதியும் தொடர்பு கொண்டால் சந்தோஷம், கடவுள் நம்பிக்கை, சுயமாக சம்பாதிக்கும் திறமை, உயர்ந்த லட்சியங்கள் உடையவனாக இருப்பான். குலம் தழைக்கும்.  ரியல் எஸ்டேட் மூலம் நல்ல வருமானம் வரும்.  நிறைய வெகுமதிகள், பாராட்டுகள் கிடைக்கும்.

4.   5ம் அதிபதியும் 2ம் அதிபதியும் பரிவர்த்தனையானால், நல்ல பணவசதியும், மகிழ்ச்சியும், நல்ல போக பாக்யமும் இருக்கும்.  வாழ்க்கையில் எல்லா சந்தோஷங்களையும் எப்படி அனுபவிக்க வேண்டும் என்ற விஷயத்தில் புத்தியை செலுத்துகிறவன். சூதாட்டத்தில் விருப்பமுடையவன்.

5.   லக்னாதிபதியும் இரண்டாம் அதிபதியும் சேர்ந்து 5ல் நின்றால் ஜாதகர் குடும்பத்தாரோடு நல்ல உறவு இருக்காது.   அவர்களே இவனை வெறுப்பார்கள்.  பிறருக்கு உதவும் குணம் இருக்கும் அதே நேரம் கல் நெஞ்சக்காரனாகவும் இருப்பான்.

6.   7ம் அதிபதி 5ல் நின்றால், திருமண வாழ்க்கையில் பிரச்சனையும், இவர்களோடு கொடிய பாபர்கள் சம்பந்தப்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு சில சமயம் குறை இருக்கும்.  இவர்கள் இருவரும் பரிவர்த்தனை ஆனால் சந்ததிகள் மூலம் குடும்பம் உயரும்.

7.    7ம் அதிபதி, 12ம் அதிபதி  இருவரும் சேர்ந்து 5ல் நின்றால் சஞ்சல புத்தியும், வரும் களத்திரத்தால் குடும்ப்பத்தில் பிரச்சனையும் , இவர்களோடு கேது, ராகு சேர்ந்தால் மனப்பிரமை ஏற்பட வாய்ப்புண்டு.

8.    10 அதிபதியும், 5ம் அதிபதியும் பரிவர்த்தனை , சேர்க்கை இருந்தால் நல்ல ஆலோசனை கூறும் உத்யோகத்தில் இருப்பபர்.  தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.  ஆனால் சில சமயம் ஜாதகருக்கு கெளரவ பங்கம் ஏற்படும்.

9.    7,8ம் அதிபதி அல்லது 3,12ம் அதிபதி  5ல் நின்றால் பிறக்கும் சந்ததிக்கு தோஷம் ஏற்படும்.  மனக்கவலை அதிகம் இருக்கும். 

10.    8ம் அதிபதியும், 5ம் அதிபதியும் தொடர்பு கொண்டால் அதிக செக்ஸ் நாட்டம் இருக்கும்.  தீய வழிகளில் புத்தியை செலுத்துவான். மறைமுகமான காரியங்களில் ஈடுபடுவான். 

11.   5ம் அதிபதியும் 11ம் அதிபதியும் தொடர்பு கொண்டால் நண்பர்களால் உதவியும், அவர்களால் மகிழ்ச்சியும் ஏற்படும்.   சில சமயம் நண்பர்களால் தொழிலில் நஷடமும் ஏற்படும்.

12.   5ம் அதிபதியும், 6ம் அதிபதியும் சம்பந்தப்பட்டால், நீடித்த நட்பு இருக்கும்.  சொத்துக்கள் நிலையாக இருக்காது. பிறரை வேலை வாங்குவதில் சாமர்த்தியசாலி.

13.   5ம் அதிபதியும், 9ம் அதிபதியும் சம்பந்தப்பட்டால், நல்ல அதிர்ஷடமும், நல்ல கெளவரமும் ஏற்படும்.  இவர்களோடு 11ம் அதிபனும் தொடர்பு கொண்டால் நல்ல செல்வ சேர்க்கை இருக்கும்.


-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

       
நான்காம் பாவம் சம்பந்தப்பட்ட முக்யமான விதிகள்

1.  4, 5ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் நல்ல சுகமும் , அரசியிலில் ஆதாயமும் நல்ல அதிகாரம் மிக்க பதவியும் கிடைக்கும். பிள்ளைகளால் முன்னேற்றமும் இருக்கும்.

2.   4, 9, ம் அதிபதிகள் சேர்க்கை இருந்தாலும், 9ன் அதிபதி நாலில் இருந்தாலும் நல்ல ஒழுக்கமும், அமைதியான குணமும், அதே சமயம் எடுத்த காரியங்களில் துணிச்சலும், சந்தோஷம், புகழ் ஏற்படும். தந்தையின் தொழிலை நிர்வாகம் செய்யும் திறனும் ஏற்படும்.

3.  6,9க்குடையவன் சேர்ந்து 4ல் நின்றால், சொத்து விஷயமாய் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். தந்தையின் சொந்தங்கள் சில சமயம் ஜாதகரை கோர்ட்டுக்கு இழுப்பார்கள்.

4.  4, 6ம் ஆதிகள் பரிவர்த்தனை பெற்றால் ஆரோக்ய குறைவு, வாதம்,  சொத்துக்கள் இழப்பு, கல்வியில் குறைபாடு, சில சமயம் அடுத்தவர் பொருளை அபகரிக்கும் குணமும் ஏற்படும்.

5.  2ம் அதிபனும், 4ம் அதிபனும் தொடர்பு கொண்டாலோ, 4ல் இருந்தாலோ, நல்ல செல்வ வளம், நல்ல வாக்கு திறன், விவசாயத்தில் வளர்ச்சி, நல்ல கெளவரவம் ஆகியவை ஏற்படும். தாயின் சொத்துக்கள் மூலமாக ஜாதகருக்கு வருமானம் வரும். தாய் வழி உறவு ஆதாயம் தரும்.

6.  லக்னாதிபதி, 4ம் அதிபதி பரிவர்த்தனை பெற்றால் , நல்ல பணவசதியும், கடவுள் நம்பிக்கையும், , நல்ல வாகன யோகமும், அரசாங்கத்தால் ஆதரவும், நல்ல வீடு வசதியும் ஏற்படும்.

7.  6,8,12 அதிபதிகள் 4ல் இருந்தால் , எதிலும் அவமரியாதை, கல்வியில் தடை, நிலம், வீடு வகையில் வம்பு, வழக்குகள்,  வாகனத்தால் நஷ்டம், சொந்த பந்த்ங்களுடன் விரோதம் ஏற்படும்.

8.  4ம் அதிபதியும், 11ம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால்  நல்ல செல்வ வளமும், நல்ல ஆதிக்க திறனும், அரசாங்க ஆதரவும் இருக்கும்.  பாபர்கள் சம்பந்தம் பெற்றால் வில்லங்க சொத்தை வாங்கி நஷ்டப்பட நேரிடும். 

9.  2, 11ம் அதிபதிகள் 4ல் சேர்க்கை பெற்றால்,  நல்ல வருமானத்தில் வேலையும், அதனால் நல்ல சுகமும் ஏற்படும்.  தன் லாபாதிபதிகள் சுகஸ்தானத்தில் இருப்பது நல்ல சுகத்தை தரும்.

10.  4ம் அதிபதியும் 7ம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் நணபர்கள் மூலமாகவும், வரும் களத்திரத்தின் மூலமாகவும் நல்ல உதவிகளும் , அவர்களால் சந்தோஷமும் ஏற்படும். 

11.  4ம் அதிபதியும், 12ம் அதிபதியும் தொடர்பு கொண்டால், அதிக குடும்ப செலவுகளும், அதனால் மனக் கவலையும், பூமி, வீடு, சொத்து, இவைகளை தன் கடனுக்காக இழப்பான்.

12.  2,7,10 அதிபதிகள் 4ல் இருந்தால் அந்நிய பெண்களால் சுகம் கிடைக்கும்.  

13.  4ல், 2,7,12ம் ஆதிகள் தொடர்பு,  பரத்தையர் பெண்களுடன் தொடர்பு அதிகமாகும்.

14.  மூன்றாம் அதிபதியும் ஆறாமதிபதியும் சேர்க்கை பெற்று 4ல் இருந்தால் அதிக கோபமும், அதிக சஞ்சல புத்தியும்,  பிறரை துன்புறுத்தும் குணமும் இருக்கும்.

15.  லக்னாதிபதி , 8ம் அதிபதி சேர்ந்து 4ல் இருந்தால் அதிகமான துன்பங்களும், உறவுகளை துறந்து செல்லும் நிலைமையும் ஏற்படும்.

16.  4ம் அதிபதியோடு, 8ம் அதிபதியும் 10 அதிபதியும் சேர்க்கை பெற்றால் உண்மை, நம்பிக்கை அற்றவனாக எல்லோருக்கும் மறியாதை அற்றவனாக இருப்பான்.



-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

Saturday 4 March 2017

மூன்றாம் பாவம் சம்பந்தப்பட்ட முக்யமான விதிகள்

1. 2ம் அதிபதி 3ம் வீட்டில் இருந்தால் ஜாதகரால் அதிகமாக பணம் சேர்க்க முடியாது. ஏன் என்றால் சேர்க்கும் இடம் 4மிடம் அதன் விரயம் 3ம் பாவமாகும்.

2. 11ம் அதிபதி 3ல் இருந்தால் அத்துடன் 3ம், 2ம் அதிபதியும் அதிபதியும் பலமானால்,டெலி கம்ன்யூனிகேசன், போக்குவரத்து சம்பந்தமான வழிகளில் நல்ல வருமானமும், வசதியும் வரும். 

3. 3ம் அதிபடியும் 6ம் அதிபதியும் பலமாக இரண்டில் நின்றால் கட்ட பஞ்சாயத்து, கந்து வட்டி போன்ற வழிகளில் பணம் வரும். 

4. லக்னாதிபதியும் 8ம் அதிபதியும் சேர்ந்து பலமாகி 3ல் நின்றால் ஆயுள் பலம் அதிகம்.

5. லக்னாதிபதி 3ல் பலவீனமாகி நின்றால் பணக் கஷ்டத்தால் அதிக துன்பம். ஆனால் பலமாக நின்றால், தன் உழைப்பால் கிடைக்கும் வருமானத்திலேயே திருப்தி ஏற்படும். பிறரால் மதிப்பு ஏற்படும்.நல்ல பலசாலி, இரண்டு மனைவிகள் வாய்க்க வாய்ப்புண்டு.  பரிவர்த்தனை ஆனால் உடன் பிறப்புக்கு நல்லது.

6. 7ம் அதிபதி 3ல் பலமானால் சந்தோஷமான தாம்பத்ய வாழ்க்கை.

7. 3ம் அதிபதியும் 10 அதிபதியும் பரிவர்த்தனை ஆகக் கூடாது, ஷஷ்டாக தோஷம் அறிவீனம், சஞ்சல புத்தி பொய் பேசும் தன்மை குழந்தையின்மை முதலியவை ஏற்படும்  நட்பு 
கிரஹங்களாக இருந்து பரிவர்த்தனை ஆனால் திடீரென்று வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். 

8. 3ம் அதிபதியும் 5ம் அதிபதியும் , 2 ம் அதிபதியும் 3ம் அதிபதியும் பரிவர்த்தனை ஆக கூடாது.வாழ்க்கை ஓரே போராட்டமாக இருக்கும்,  அதிக ஏற்ற தாழ்வுகள் இருக்கும். ஆனால் உடன் பிறப்பு முன்னேறுவார்கள். 

9. 3ம் அதிபதி 9 மற்றும் 10 அதிபதிகள் பரிவர்த்தனை ஆகக் கூடாது.  அதிர்ஷடம் இருக்காது. செய்யும் முயற்ச்சிகளில் தடை இருக்கும்.  

10. 3ம் அதிபதியும், 12ம் அதிபதியும் பரிவர்த்தனை ஆனாலோ, 12ல் இருந்தாலோ, திருட்டு குணம் இருக்கும். 

11. 3ம் அதிபதியும் 4ம் அதிபதியும் பரிவர்த்தனை ஆனால் கல்வி தடை, சுகக் குறைவு,  இருக்கும் வீட்டில் அமைதியில்லாமை , நோய் ஆகியவை ஏற்படும்.  

12. 10 அத்பதியும், 11ம் அதிபதியும் சேர்ந்து 3ல் நின்றால் சில சமயங்களில் உத்யோகத்தில் பாதிப்பு ஏற்படும்.  தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.  இதில் ஒருவர் பலமானால் உத்யோகத்தில் விருத்தி ஏற்பட்டு தனம் சேரும். 

13.  2, 3ம் அதிபதிகள் சேர்க்கை பெற்று, சுபர் பார்வை பெற்றாலோ அல்லது 9ம் அதிபதி பார்வை பெற்றாலோ, பயணங்கள் மூலமாக நல்ல வருமானம் வரும்.  உடன் பிறப்புக்கு திடீர் பண வசதி வரும். அவரால் ஆதாயம் உண்டு. .  பத்திர பதிவு, விற்பனை மூலமாக நல்ல வருமானம் வரும்.  

14. 6ம் அதிபதி பலமாக 3ல் இருந்தால், ஜாதகரால் அவர் குடும்பத்தார் அதிக தொல்லைக்கு ஆளாவார்கள்.  செங்கள் சூளை, மணல், எரிபொருள் இவற்றின் மூலமாக வருமானம் வரும் . அந்த தொழில் சிறப்பு. 

15. லக்னாதிபதியும், 5ம் அதிபதியும் சேர்ந்து பலமாக 3ல் இருந்தால் ஜாதகருக்கு முரட்டுத்தனம் வரும். மற்றவர் இவரை பார்த்து பயப்படுவார்கள்.  

16.  எட்டாமாதி பலாமாக 3ல் இருந்தால் தன நாசமும், அதிக நோயும் மறைமுகமான இழப்புகளும், பொருள்கள் களவு போதலும் ஏற்படும். ஏன் என்றால் இது எட்டுக்கு எட்டாகும்.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-