Thursday 16 March 2017

ஒன்பதாம பாவம் சம்பந்தப்பட்ட முக்யமான விதிகள்

1. இரண்டாமதிபன், ஐந்தாமதிபன் சேர்ந்து ஒன்பதில் இருந்தால் நல்ல தனப்ராப்தி இருக்கும். புத்திசாலிதனத்தால் வருமானத்தை பெருக்குவார்கள்.  பிள்ளைகளால் நல்ல தனப்பிராப்தி இருக்கும்.  பாரம்பரிய சொத்துக்கள் மூலம் வருமானம் வரும்.

2. இரண்டாமதிபன் பத்தாமதிபன் சேர்ந்து ஒன்பதில் இருந்தால் நல்ல பொருளாதார முன்னேற்றமும், பணம் சம்பாதிப்பதில் வெற்றியும் பெறுவார்கள். பணத்தின் மூலமாக பணத்தை பெருக்குவார்கள்.  தந்தை மூலம் தன்ப்பராப்தி வரும்.

3. ஐந்தாமதிபன் ஒன்பதில் இருந்தால் குழந்தைகளுக்கு முன்னேற்றமும், அவர்களால் குடும்ப மகிழ்ச்சியும் இருக்கும். பிள்ளைகள் பங்கு வர்த்தகத்தின் மூலம் அதிகமாக சம்பாதிப்பார்கள். சில சமயம்  தாத்தாவின் தொழிலை பேரன் தொடர்ந்து செய்வான்.

4. பத்தாமதிபன் ஒன்பதில் இருந்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  ஆனால் உத்யோகத்தில் நல்ல பயன் பெற முடியாது. இவர்கள் இருவரும் பரிவர்த்தனை ஆனால் சொத்து சேரும், நிலத்தால் நல்ல வருமானம் கிடைக்கும், திடீர் பணவசதிகள் வரும், பெரிய மனிதர்கள் சந்திப்பு கிடைக்கும்.

5. ஏழாமதிபன் ஓன்பதாமதிபன் பரிவர்த்தனை ஆனால் வாழ்க்கையில் அதிர்ஷடம் இருக்காது. சில சமயம் மனைவியின் வீம்பான போக்கால் மண வாழ்க்கையில் போராட்டம் இருக்கும். 

6. நான்காம் அதிபதி, ஒன்பதாமதிபதி பரிவர்த்தனை ஆனால் நல்ல அந்தஸ்து, அதிகார பதவி, நல்ல தனம், குடும்ப உறுப்பினர்களின் உதவிகள் கிடைக்கும்.

7. எட்டு, ஒன்பதாம் அதிபதிகள் பரிவர்த்தனை ஆனால் வாழ்க்கையில் தோல்வி, பெரும் ஏற்ற இறக்கம், கஷ்டங்கள், ஏற்படும்.  தந்தையால் ஆதாயம் கிடைப்பது கஷ்டம். 
 
8. லக்னாதிபதி ஒன்பதாமதிபதி தொடர்பால், நல்ல பேச்சு திறமையும் நல்ல அதிர்ஷ்டமும், சமூகத்தில் வெற்றியும், நல்ல அதிர்ஷ்டசாலி பெண் குழத்தைகளும் கிடைக்கும்.  இவர்கள் நல்ல நட்பு நக்ஷத்திர சாரத்தில் நின்றால் தந்தைக்கும் மகனுக்கும் மிகுந்த ஒற்றுமை இருக்கும்.

9. ஆறாமதிபதி, ஒன்பதாமதிபதி தொடர்பு பெற்றோருக்கு கஷ்டமும், காரிய தடையும், சமூகத்தில் இறக்கமும், இருக்கும்.  மரம், கல் சிமெண்ட், நிலக்கரி, மணல் வியாபாரம் செய்தால் சிறப்பு.

10. இரண்டாமதிபன், ஒன்பதாமதிபன் பரிவர்த்தனை நல்ல உடல் வாகும், நல்ல பண வசதியும், வாழ்க்கையில் அந்தஸ்து, முன்னேற்றம் இருக்கும்.

11. மூன்றாஅதிபதி, ஒன்பதாம் அதிபதி பரிவர்த்தனை இருந்தால் சொத்து அழியும், வாழ்க்கையில் துக்கங்கள் மிகும்,  மணக்கணக்குகள் பொய்யாகும், பணக்கஷ்டம் அதிகம் இருக்கும்.  இளைய சகோதரன் மனைவியால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும்.

12. பனிரெண்டாமதிபனும் ஒன்பதாம் அதிபனும் தொடர்பு கொண்டால் புண்ய தலங்களை தரிசிக்கும் பாக்யமும் , புனித நதிகளில் நீராடும் பாக்யமும் ஏற்படும்.


13. நான்காமதிபன், ஆறாமதிபன் சேர்ந்து ஒன்பதில் இருந்தால் தந்தைக்கும் ஜாதகருக்கும் ஒத்து வராது.  சண்டை சச்சரவுகள் இருக்கும்

No comments:

Post a Comment