Wednesday 21 March 2018


சகுனங்களும் நிமித்தங்களும்
மனிதனின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாய் இருப்பது சகுனமும் நிமித்தமும் ஆகும்.   மூட நம்பிக்கயில்லாதவர்கள் கூட இதில் அதிக நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால் அதற்கு அவர்கள் சொல்லும் வார்த்தை என்பது இல்லை சார் இது ஒரு சென்டிமென்டாக வைத்துக் கொண்டுள்ளேன் என்பார்கள்.
சகுனம்  நிமித்தம் என்பது நமக்கு எதிர்பாரமல் சுற்றுப்புரத்தில் நடப்பது, நம்மை எதிர் நோக்கி இருப்பது, கேட்கக் கூடிய சப்தங்கள் என்பவை ஆகும். நாம் ஒரு விஷயம் பேசிக்கொண்டிருக்கும் போதோ, ஒரு காரியம் நடத்திக் கொண்டிருக்கும் போதோ, பக்ஷிகள், விலங்குகள், பல்லி போன்ற ஜந்துக்களால் ஏற்படுதப்படும் சப்தங்கள், மனிதர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் ஆகியவைகளால் நமக்கு மனதில் ஏற்படக் கூடிய உணர்வுகள் சம்பந்தப்பட்டது.
நிமித்தம் என்பது தானே ஏற்படுவது.அதை நம்மால் மாற்ற முடியாது.  சகுனமும் என்பது அப்படி இருந்தாலும், சில சமயம் நம்மால் ஏற்படுத்திக் கொள்வது  ஆகும். தானே ஏற்படும் நிமித்தங்களை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நல்ல சகுனங்களை நாமே ஏற்படுத்திக் கொள்வோம்.  உதாரணமாக நாம் ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்கிறோம் என்றால் நம் வீட்டை சேர்ந்த பெண்களை எதிரில் வரச் செய்து அதன்பிறகு வெளியே கிளம்பிச் செல்வோம்.  எனவே இது போன்ற விஷயங்கள் ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையில் அவனோடு சம்பந்தப்பட்டு அவன் மனம் சார்ந்த விஷயங்களில் ஒரு தாக்கத்தை அதிகமாகவே ஏற்படுத்திவிடுகிறது.  வெளியே கிளம்பிச் செல்கையில் எதிரில்  ஒரு கணவனை இழந்த பெண் வந்தால் அபசகுனமாக பார்ப்பதும், அது தன்னுடைய  நெருங்கிய உறவாக இருந்தால் அதை அபசகுனமாக பார்க்காத தன்மையும்  என இருவித மனப்பாங்கில் உள்ளவர்களாக இருக்கிறோம்.  இதில் நமக்கு நாமே ஒரு ஸ்திரத்தன்மை இல்லாமல் இருக்கிறோம்.  அதேபோல் நாம் ஒரு நல்ல விஷயமாக பேசிக் கொண்டிருக்கையில், ஒருவர் தும்மினால் அபசகுனமாகவும் அவரே இன்னொரு முறை தும்மினால் சுப சகுனமாகவும் பார்க்கப் படுகிறது.  அதேபோல் சுற்றுப்புரத்தில் ஒருவர் அமங்கல வார்த்தை பேசினாலே அதுவும் அபசகுனமாக இருக்கிறது.  அதனால் தான் இன்றும் சுபகாரியங்கள் நடக்கும் இடங்களில் மங்கல

வாத்தியங்கள் முழங்கப் படுகின்றன.   அதாவது அந்த நல்ல காரியங்கள் நடக்கும் நேரத்தில் அபசகுன வார்த்தைகள் காதில் விழாமல் இருக்க மந்திர உச்சாடனங்களும், மங்கல வாதியங்களின் சத்தங்களின் அதிர்வலைகளும் அதை நல்லதாக மாற்றிவிடும்.  சங்கின் ஓலி சுப சகுனமாகும்.  பண்டய காலங்களில் போர் காலங்களில் இழைக்கப்படும் சங்கின் ஒலி வெற்றி சப்தமாகவும் நல்ல சகுனமாகவும்  கருதப்பட்டது. 
வீட்டில் உள்ள  விருக்ஷம் பூத்தால் சுப சகுனமாகும்.  அதுவே முறிந்தாலோ, அதில் காய்த்த காய் வாடினாலோ அசுப சகுனமாகும். வீட்டில் முருங்கை மரம் வளர்க்க கூடாது .  ஏனென்றால் அதை பிசாச மரம் என்பார்கள்.  அது முறிந்து விழுந்தால் சுற்றுப்புரத்தில் ஒர்  இறப்பு ஏற்படும்.  பேசிக் கொண்டிருக்கும் போது கெளலி எனப்படும் பல்லி இடும் சப்தம் அது எந்த திக்கிலிருந்து வந்தது என்பதை பார்த்து அதை சுப, அசுப சகுனமாக பார்க்கப்படுகிறது.  பஞ்சாங்கத்தில் பல்லி சொல்லுக்கு பலன், பல்லி விழுதலின் பலன் என்று கொடுக்கப்பட்டுள்ளது.  
சுப சகுனமாக, வீணை, புல்லாங்குழல், மேளம், சங்கு, இவைகளை பார்ப்பதும், இவைகளின் சப்தமும் ஆகும்.  அழகிய பெண்கள், நாட்டிய பெண்கள், தயிர், மஞ்சள் கலந்த அரிசி(அக்ஷதை) கரும்பு, அருகம்புல், நீர் நிரம்பிய குடம், பூக்கள், மாலைகள், கன்னி பெண்கள், கருடன்,ஆலய மணி ஓசை, விளக்கு, தாமரை பூ, நாய் தன் உடலை சிலிர்ப்பது, பிணம் எதிரே வருவது, இரட்டை பரதேசி, பசு மாடுகள்   இவைகளை கண்டால் சுபசகுனமாகும்.

அணையும் விளக்கு, தண்ணீர் பாத்திரம் சாய்ந்து நீர் வெளியேறுவது, உடுத்திய ஆடை கிழிவது, செருப்பு அறுந்து போதல், அமங்கல வார்த்தை, வீட்டுக்கு விலக்கான பெண்களை காணுதல், ஒற்றை தும்மல், சத்தமான வார்த்தைகள், வீட்டில் மரம் முறிதல், பல்லி இடப்புறம் கத்துவது, பன்றி, பாம்பு, குதிரையை காண்பது, சத்தமிடல், எண்ணெய் குடம், விளக்குமாற்றை கையில் வைத்திருப்பது,


தன் நக்ஷத்திரத்திற்குறிய பக்ஷி இடமிருந்து வலமாக செல்வது , விருக்ஷம் சாய்வது, மிருகம் இறந்து விட்டதாக கேட்பது  சாப்பிட்டு விட்டு போ , வந்து சாப்பிடு என்ற
வார்த்தைகளும்,  எதிரில் அலங்கரிங்கப்பட்ட தேரில் ஸ்வாமி வருபது, ஒற்றை பரதேசி,  எண்ணெய் தலையுடன் எதிரில் வரும் பெண், விதவை, எருமை மாடு ஆகியவை அசுப சகுனமாகும்.
பொதுவாக, ஜாதகத்தின் கால புருஷனனின் லக்னம் மேஷமாகும். அதன் ஏழாம் வீடு துலாம் ஆகும். அதன்அதிபதி சுக்ரன் ஆகும்.  ஒன்றொக்கொன்று ஏழாம் வீடாக வருவதால் சுபத்தன்மை நிறைந்தவையாக பார்க்கப்படுகிறது.  ஆகவே சுக்ரன் சம்பந்தப்பட்ட பொருட்களெல்லாம் சுபத்தன்மை நிறைந்தவை.  அதேபோல் கால புருஷனின் பாதகாதிபதி சனி  ஆகவே அவர் சம்பந்தப்பட்ட பொருட்களெல்லாம் அசுபத்தன்மை நிறைந்தவையாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சூரியன் சந்திரருக்கு  ராகு கேது பகையாவதால் அவை அசுபமாக பார்க்கப்படுகிறது.  பறவைகள் கூட்டமாக பறந்தால் சுப சகுனமாகவும், அவை கத்திக் கொண்டே பறந்தால் அபசகுனமாகவும் ஆகிறது. ஒரு நல்ல விஷயமாக வெளியே செல்லும் போது வீட்டில் வளர்க்கும் மீன்களில் ஒன்று இறந்தால் அபசகுனமாகும். 
சரி இதில் சுப சகுனம் என்பது நல்லதாக பார்க்கப்பட்டாலும் சிலருக்கு அது வெற்றியை தராவிட்டால் மனது சங்கடப்பட்டுவிடுவார்கள்.  ஏன் நாம் நல்ல சகுனம் பார்த்துதானே வந்தோம் ஏன் தடங்கல் ஏற்பட்டது என்று குழம்புவார்கள். அது வேறொன்றுமில்லை.  அவர் கிளம்புகிற நேரத்தில் அவரின்ஜாதகத்தில்  லக்னாதிபதியும்  அவரின் ஏழாம் அதிபதியும் நட்பாக இருந்தால்லும் அவர் ஜாதகத்தின் யோகாதிபதியோடு சேக்கையோ, பார்வையோ கொண்டால் நல்ல சகுனத்திற்கு ஏற்ப நல்ல பலனாகும் , பகையாக இருந்தாலும் அவர் ஜாதகத்தின் பாதகாதிபதியோடு சேர்க்கையோ பார்வையோ கொண்டால்  நல்ல சகுனம் பார்த்து கிளம்பினாலும் அது கெட்ட பலனாகவும் மாறும்.   அதேபோல் சிலர் அசுப சகுனத்தை பார்த்தாலும் அதை சட்டை செய்யாமல் வெளியே சென்று வெற்றியோடு

வருவார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அதெல்லாம் மூட நம்பிக்கை . அதையெல்லாம் நம்பாமல் சென்றதால் தான் எனக்கு வெற்றி என்பார்கள். ஆனால் அந்த நேரத்தில் அவர் ஜாதாத்தின் ஏழாம் அதிபதி நல்ல நிலையில் அவர் லக்னாதிபதியோடு சேர்க்கை பார்வை கொண்டிருப்பார்.  அல்லது அவர் பாதகாதிபதி அவரின் யோகாதிபதியோடு நல்ல சேர்க்கையோ, பார்வையோடு கொண்டிருப்பார். இதை அந்த நேரத்திற்குண்டான ப்ரஸன்ன ஜாதகத்தின் மூலம் கண்டு உறுதிபடுத்திக் கொள்ளலாம்.  இதில் நிறைய விஷயங்கள் இருப்பதால் அடுத்த பகுதியில் தொடர்ந்து பார்க்கலாம்.

நன்றியுடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.  போன்: 9094176198.
  
     


சனிபகவானை பற்றி புராணம் என்ன சொல்கிறது .
பொதுவாகவே நாம் சனி பகவானை  சனீஸ்வரன் என்று அழைக்கிறோம்.  ஆனால் அவருக்கு அது பெயரல்ல.  அவர் பெயர் சனைஸ்சரன் என்று பெயர்.  அதாவது சனைஸ்சரஹா என்றால் மெதுவாக விந்தி விந்தி நடப்பவன் என்று அர்த்தம். சனியின் கோள் குருவுக்கு அடுத்த பெரிய கோள். அதிக வாயுவை உடையது. அதில் இருந்து நீல நிற கதிர்கள் வெளிப்படுகிறது.  சூரியனின் கடைசி வட்டத்தில் இருப்பதால் சூரியனை சுற்றி வர அதிக காலம் எடுத்து கொள்கிறார்.  அதனால் தான் சனி பகவானை நொண்டி, வயதானவன், அழுக்கானவன் என்கிறோம்.
ஒரு முறை இராவணன் தன் மனைவி கர்ப்பமான சமயத்தில் அவனுக்கு பிறக்கப் போகும் குழந்தை சிரஞ்சீவியாய் மரணம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நவக்கிரஹங்களை சிறையிலிட்டு அவன் அனுமதி தரும் வரை அவன் சொல்லும் இடங்களில் நிற்க வேண்டும் என் உத்தரவிட்டான்.  இது தர்மத்திற்கு மீறிய செயலாக இருக்கிறதே என கொதித்த பிரஹஸ்பதியான குரு அசுர குருவான சுக்ராச்சாரியாரிடம் சொல்ல , அவரோ, நான் என்ன செய்வது என்னையும் சிறையிலிட்டு விட்டானே என் வினவ , குருவோ, சனியை பார்த்து சற்று நகர்ந்து நிற்க சொல்கிறார் . சனி அதற்கேற்ப தன்னை நிற்க வைத்த மீன ராசி மண்டலத்தில் இருந்து தன் கால மேஷ ராசி மண்டலத்தில் வைக்க முயல்கிறார்.
அதை பார்த்த இராவணன் தன் கதாயுதத்தால் சனியில் காலை தாக்குகிறார்.  அதில் காலில் அடி பட்ட சனி பகவான நிலை குலைந்து மேஷ ராசியில் விழுந்து விடுகிறார்.   ஆகவே தான் சனி பகவான்  பலமிழந்து மேஷத்தில் நிற்கிறார்.  இதனால் கோபம் கொண்ட சூர்ய பகவான் தன் மகனை காப்பாற்ற அதிக கோபக் கனலோடு தன் மகனை தாங்கி பிடிக்கிறார். ஆகவே தான் சூரியன் மேஷத்தில் உச்சமாகி தன் மகனின் நீச்சத்தை அதாவது பலவீனத்தை போக்குகிறார். 
அதை போல் புராணக் கதைகளின் படி, சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்றால் பயமாகும். அதனால் ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால், சனியின் தாக்கங்கள் குறையும் என நம்பப்படுகிறது.
                                                                 


ஒரு முறை தன் கால சுழற்ச்சியின் படி சனிபகவான் அனுமனை பிடிக்க வேண்டிய நேரம் வந்தது.   அந்த நேரத்தில் தன் பகவான புனர் பூச நக்ஷத்திரத்தில் உதித்து அந்த ராசி நாதன் உச்சமாக நிற்கும் கடக ராசியில் உதித்த ராம சந்திர மூர்த்தி இராவணனோடு யுத்தம் புரிய இலங்கைக்கு செல்லும் பாலம் அமைக்கும் பணியில் இருந்தார்.
அவரை கண்ட சனி பகவான், ஹனுமனே நான் உன்னை பீடிக்கும் காலம் வந்திருக்கிறது.  ஆகவே நான் உன்னை பிடிக்கப் போகிறேன் என்றார்.  அதற்கு ஹனுமனோ, நான் இப்போது என் பகவானுக்காக ஒரு பணியில் இருக்கிறேன். பிறகு வா என்கிறார்.  அதற்கு சனி பகவான், அது முடியாது நான் எனக்கு இட்ட பணியை செய்ய வேண்டும் என்கிறார்.
சரி எவ்வளவு நாள் என்னுள் இருப்பாய் என்கிறார்.  அதற்கு ஏழரை வருடம் என்கிறார் அது முடியாது நான் என் பிரபுவின் வேலையை அவ்வளவு காலம் தள்ள முடியாது என்று சொல்ல, கடைசியில் ஏழரை நாழிகை பீடிக்க ஒப்புக் கொள்கிறார்.
உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல் அங்கு ஏழரை நாழிகை இருந்துவிட்டு போய்விடுகிறேன்” என்றார். “கடமையைச் செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்” என்றார்.
சனி பகவானும் ஏறி அமர்ந்தார். பாலம் அமைக்கும் வேலையில் மும்முறமாக இருந்த ஹனுமனோ தன் தலையில் கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றி கடலில் போட்டு பாலம் அமைத்து கொண்டிருந்தார். இதன் வேதனையை தாங்காத சனி பகவான்அலறினார். “சொன்ன சொல் தவறக்கூடாது.இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்” என்றார் அனுமன். அத்தனை வேதனையும் பொறுத்துக் கொண்டு எழரை நாழிகை முடிந்த பிறகு  இறக்கிவிட்டார். “ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை” என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.  அதற்கு பிரதி பலனாக,உடல் அங்க ஹீனமானவர்களை அனுமன் மிகவும் நேசிப்பான்.அவர்களுக்கு உடல் சக்தியை பெருக்கி தருவான். சனியின் தான்யமான உளுந்தில் செய்த வடை அனுமனுக்கு பீரிதியாகிறது. 


ராம நாமத்தையும் ஆஞ்சநேயர் மூல மந்திரங்களை 108 தடவை உச்சரித்து விட்டு எங்கு சென்றலும் அது நன்மையாக இருக்கும் நினைத்தது நடக்கும்.
ஜன்ம சனி நடப்பவர்கள் பிறர் பார்க்க ஒரு சிறு கல்லை எடுத்து ராம நாமத்தை சொல்லி  தன்னுடனே வைத்துக் கொண்டால் பாதிப்பு குறையும்.   
ஜாதகத்தில் சனிபகவானின் வீடுகள் இரண்டும் அருகருகே இருக்கும்.  அவரின் இரண்டு பக்கமும் குருவின் வீடுகள்.  நில ராசி, காற்று ராசி இரண்டுக்கும் சம்பந்தப்படும் கிரஹம் சனி பகவான். அதேபோல் இந்த இரண்டுக்கும் சம்பந்தப்படும் தெய்வம் ஹனுமான் ஆவார்.  ஆகவே கடல் தாண்டி வேலைக்கு செல்பவர்கள் ஹனுமனை வேண்டிக் கொண்டால் அவர் எந்த தடையையும் அகற்றி நல்ல படியாக முடித்து வைப்பார்.
அதேபோல் மூலத்தில் பிறந்தவர்களையும்,  புனர்பூசத்தில் பிறந்தவர்களையும் சனி பகவான் ஒன்றும் செய்வதில்லை. கணவன் மனைவி பிரிவில் இருப்பவர்கள் ஹனுமனை வேண்டிக் கொண்டால் பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள்.  ஜாதகத்தில் ராகுவும் கேதுவும்தான் திருமண பிரிவை தருவார்கள்.  ஜாதகத்தில் இவர்களின் மூலதிரிகோண வீடுகள் சனி பகவானின் வீடுகளாக இருப்பதால் சனிபகவானுக்கு பிரியமான ஹனுமனை வேண்டிக் கொண்டால் திருமண பிரிவு நீங்கி விடும்.
இன்னும் வரும்.
அன்புடன் ……………  ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.  Ph: 9094176198     

 Top of Form
யோதிஷ் வித்யா பீடம். 
சனீஷ்வரன் ஒரு மஹா புருஷன்

சனீஷ்வரன்  : இந்த பெயரை கேட்டாலே மனதில் ஒருவித பயம், கலக்கம் தன் எதிர்காலத்தை பற்றிய கவலை இதெல்லாம் மனதில் தோன்றுகிறது.  இது சரியா தவறா.  உண்மையாக சொல்வதென்றால் இது தவறு தான்.   சனி தன் நிலையில் ஜாதகத்தில் எங்கு நின்றாலும் அந்த பாவத்தை தூய்மை படுத்ததான் நிலை பெறுகிறாரே தவிர மற்ற படி நாம் நினைப்பது போல் இல்லை. அதாவது ஒரு தொழிற்ச்சாலையில் உள்ள இயந்திரங்களுக்கு ஹாலிடே பீரியட் என்று ஒன்று இருக்கும். அதாவாது தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் அவற்றிற்கு ஒய்வு கொடுத்து அதை சரி செய்து மீண்டும் இயக்குவார்கள்.  அதைபோல் தான் நம் மனித உடம்பும். அதை சரி செய்வதே நம் சனீஷ்வரன்தான். 

 இதை சற்று விரிவாக பார்ப்போம்.
சனி பகவானுக்கு சுபத்தன்மை உண்டா இல்லையா.  நிச்சயமாக உண்டு.  அது எப்படி சூரியன் புதல்வன்தன் தந்தையின் குணத்துக்கு எதிராக செயல் படுவார்.  ஆஸ்ட்ரானமிபடி சூரியனில் இருப்பது ஹைட்ரஜன் வாயு.  சனியில் இருப்பதும் இதேதான் சற்று குறைவு. அதோடு ஹீலியம் வாயுவும் உண்டு. இவை தான் ஒரு அணு உருவாக காரணிகள்.  ஆகவே தான் சனியின் தன்மை கர்மாவை தரும் காரணியாக இருந்து கர்ம காரகனாக இருக்கிறார். அவர்  தயவு இல்லாமல் ஒரு கர்மாவும் நடை பெறாது.     அவரவர் கர்ம வினைகளைக்கேற்ப தான் பலன்களை தருவார்  செய்வார். சனி நல்லது செய்ய வேண்டும் என்றால் அதை அவர் குருவின் மூலமாக அல்லது லக்ன சுபர் மூலமாகத்தான் செய்வார்.

சனீஷ்வரனுக்கு வேலைக் காரன் என்ற பெயரும் உண்டு.  அதாவது ஒரு ஜாதகருக்கு வேலையை தருவதே இவர் தான். என்ன தான் ஜாதகத்தில் பத்தாம் பாவம் ஒருவரின் தொழிலை பற்றி தெரிந்து கொள்வது என்றாலும் அந்த தொழிலில் அவர் எப்படி செயல் படுவார் என்பதை சனியின் இருப்பிடத்தை வைத்து தான் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு ஜாதகத்தில் சனீஷ்வரன் பலம் பெற்றாலும் சரி அல்லது பலம் பெறாவிட்டாலும் சரி அவர் தன் நிலையில் இருந்து சற்று விலகாமல் அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப பலா பலன்களை எவ்வாறு தரவேண்டுமோ அவ்வாறு தருவார். நல்ல கர்ம வினை உள்ளவர்களுக்கு நல்ல பலன்களையும் அது சரியில்லாதவர்களுக்கு கஷ்ட பலன்களையும் தருவ்வார்.  அதாவது தர்ம நியாபடி நடப்பவர்களுக்கு சனீஷ்வரன் தன் ராசி பெயர்ச்சியால் எந்த ராசியில் நின்றாலும் அவர்களுக்கு நல்ல பலன்களை தான் தருவார்.   

அதாவது ஒவ்வொருவரும் தான் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.   தினமும் நாம் ஈடுபடும் அத்துனை கர்மாவுக்கும் சனியே பிரதானமாகிறார். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஆன்மீகத்தில் உள்ளவர் இல்லாதவர் அதாவது இறை பக்தி உள்ளவர் இல்லாதவர்.  அது எவராக இருந்தாலும் தன் ஒழுக்கத்தில் இருந்து தவறுபவராக இருந்தால் அதற்குறிய  தண்டனையை தருபவர் சனீஷ்வரன் தான்.   

சனீஷ்வரன் நம் சூரிய குடும்பத்தில் கடைசி வட்டத்தில் இருப்பவர் . அதனால் அவர் ராசி சக்கரத்தை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் முப்பது வருடங்கள் ஆகிறது. அதாவது ஒரு ராசியில் முப்பது மாதங்கள் இருப்பார்.  சனீஷ்வரன் எட்டில் நின்றாலும் மீன ராசியில் இருந்தாலுமாஆயுள் தீர்க்கம் உண்டு என்பார்கள்.  ஆனால் அப்படி இல்லாதவர்களுக்கு ஆயுள் குறைவாக இருக்கிறதா. அப்படி இல்லை.  கர்மா கணக்கு சீக்கிரம் தீர்ந்தவர்களுக்கு எதற்கு அதிக ஆயுள்.  ஆயுள் அதிகம் என்றாலே அதற்கேற்ப அதிக கஷ்டட்தையும் அனுபவிக்க வேண்டுமல்லவா.  

சனீஷ்வரனின் வீடுகளான மகரம் கும்பம் இரண்டுமே அருகருகே இருப்பதால் மேஷ லக்னத்தில் இருந்து மீன லக்னம் வரை ஒவ்வொரு ராசிக்கும் சனீஷ்வரனின் வீடு ஒரு சுப வீடாக வரும். ஆகவே ஒவ்வொரு லக்னத்திற்கும் அவர் சுப பலனை தந்துதானே ஆகவேண்டும்.  ஒருவரின் வாழ்க்கையில் கிட்டதட்ட பதினெட்டும் ஆண்டுகள் அவர் சஞ்சரிக்கும் ராசிக்கு ஏற்ப,  விரய சனி, ஜன்ம சனி, குடும்ப சனி, அர்த்தஷ்டம சனி, களத்திர சனி, அஷ்டம சனி, கண்ட சனி என்கிற ரீதியில் பலன்களை தருவார்.  அது சிலருக்கு சுப பலனையும் தருவார், சிலருக்கு அசுப பலனையும் தருவார்.  அதனால் அவருக்கு பெயர் கர்மாதிபதி என்று பெயர்.  ஆகவே இந்த கர்மாதிபதி தன் கர்ம பலனை சுபமாக தரவேண்டும் என்றால் தர்மாதிபதி எனும் குருவோடு தொடர்பு வேண்டும்.  ஆகவே ஒருவர் ஜாதகத்தில் சனியும் குருவும் தொடர்பில் இருந்தால் அவருக்கு கோசாரத்தில் சனி எந்த பாதிப்பையும் தரமாட்டார்.
அல்லது அவருக்கு ஜாதகத்தில் அவரின் பூர்வ புண்யாதிபதி அல்லது பாக்யாதிபதி தொடர்பு இருந்தால் நல்லது.  ஒருவருக்கு தொழில் சரியாக போகவில்லை என்றால் அதற்கும் சனீஷ்வரன் தான் காரணம், ஒருவருக்கு உடல் நிலை கஷ்டப்படுத்துகிறது என்றால் அதற்கும் சனீஷ்வரன் தான் காரணம் என்று சொல்லியே பழக்கப்பட்டு விட்டோம்.  ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை கருப்பாக பிறந்து விட்டால் அதற்கும் காரணம் சனீஷ்வர்ன் தான். அவனை கூப்பிடும் போதெல்லாம் சனியனே என்றுதானே கூப்பிடுவார்கள்.   தனக்கு சுக்ர தசா வந்தால் மகிழ்ச்சி என்பதாக நினைக்கும் மனம் சனி தசா வந்தால் கஷ்டப்படுத்துகிறது.   

கிரகங்களின் பலத்தை பற்றி நுணுக்கமாகச் சொல்லப் போனால் உச்சம் பெறும் அனைத்துக் கிரகங்களும் நமக்கு நன்மை செய்யும் என்றால் நமது ஞானிகள் சுபக்கிரகங்கள் பாபக் கிரகங்கள் என்று கிரகங்களை இரண்டு பிரிவாக பிரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.  ஏன் என்றால் சிலருக்கு செவ்வாயும் லக்னாதிபதியாக வருவார்.  சனீஷ்வரனும் லக்னாதிபதியாக வருவார்.  சூரியனும் லக்னாதிபதியாக வருவார். சனீஷ்வரனின் வீட்டில் தான் செவ்வாய் உச்சமாகிறார்.  ஆனால் ஒரு சுபரான குரு அங்கு நீச்சமாகிறார்.  ஒரு சுபரான சுக்ரன் வீட்டில் தான் பாபர் எனும் சனீஷ்வரன் உச்சமாகிறார்.  ஆகவே எவரும் சுபரும் இல்லை. பாபரும் இல்லை.

ஆகவே சனிப் பெயர்ச்சி எனும் காலங்களில் மனம் தளராமல் தன் வேலைகளை நன்றாக செய்து வந்தாலே அதுவே சிறப்பை கொண்டு வரும். கோசார ரீதியாக சனிப் பெயர்ச்சி அவரவர் லக்னத்திற்கோ, ராசிக்கோ பாதகமான இடத்தில் சஞ்சரித்தாலும் அவரவர் ஜாதக ரீதியாக தசா புத்திகள் நன்றாக நடந்தால் பாதக பலன் குறைவாகதான் இருக்கும். தசா புத்தி சரியாக இல்லாதவர்களுக்கு சற்று பாதக பலன்கள் ஏற்படலாம். ஆகவே பொதுவான பரிகாரமாக அங்க ஹீனமானவர்களுக்கு உதவி செய்வது.  தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவி செய்வது.  வாரம் தவறாமல் எண்ணெய் தேய்த்து குளிப்பது.  நள புராணம் வாசிப்பது, கேட்பது.  சனீஷ்வர காயத்திரியை தினம் 108 முறை ஜபிப்பது.  ஹனுமன் ஸ்லோகம் சொல்வது.   தன் வீட்டில் உள்ளோர் காலணிகளை தினமும் துடைத்து வைப்பது, வெளியில் சென்று வரும் போது காலை நன்கு கழுவிக் கொள்வது ,  குரங்குகளுக்கு வாழை பழம் வாங்கி தருவது, ஆகியவை செய்யலாம்.

பொதுவாக, ஜன்ம சனி நடப்பவர்கள் திருகொள்ளிக் காடு, திருநள்ளாறு சனீழ்ஹ்வரன் கோயில், சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோயில், தர்மராஜா கோயில் ஆகிய இடங்களுக்கு சென்று ஜன்ம நக்ஷத்திரம் அன்று வழிபாடு செய்து நலம் தரும்.

என்னடா இது  எல்லோரும் சனீஷ்வரனை கெட்டவராகவே சொல்லும் போது இவர் நல்லவராகவே சொல்கிறாரே என்று நினைப்பீர்கள்.  சனீஷ்வரனை போல் கொடுப்பார் இல்லை.  காலபுருஷனின் ஜீவனாதிபதி லாபாதிபதி ஆவார் சனீஷ்வரன்.  ஆகவே சனீஷ்வரனை துதித்து சகல சங்கடங்களையும் போக்கவேண்டும் என்று வேண்டி பிராயச்சித்தம் செய்யுங்கள். எல்லோருக்கும் சனீஷ்வர பகவான் நன்மையே செய்வார்.
வாழ்க வளமுடன். 
அன்புடன்
சிரோண்மனி ஸ்ரீரங்கம் கிருஷ்ணன்

பாரம்பர்ய ஜ்யோதிஷ் வித்யா பீடம். 

Tuesday 25 July 2017



லக்ஷ்மி கல்யாண வைபோகமே

ஜாதக ஆய்வில் திருமணப் பொருத்தம்.

முகவுரை:  ஆடி முடிந்து ஆவணி தொடங்கியவுடன் சுப காரியங்கள் தொடக்கமாக
திருமணம் , மனிதர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு மங்கள நிகழ்ச்சி.  தனித்தனியாக வாழ்ந்த இருவர் மனதாலும், உடலாலும் இணையும் ஒரு உன்னத நிகழ்ச்சி.  ஒரு பெண் சிட்டுக் குருவியாய்  ஆடிப் பாடி விளையாடிய தன் தாய் வீட்டை விட்டு மற்றொரு வீட்டில் சகல வித பொறுப்புகளோடு மஹாலக்ஷ்மியாய் வாழ ஆரம்பிக்கும் ஒரு சுபமான தருணம். திருநிறைச் செல்வியாய் இருந்தவள் திருமகளாகி ஒரு இல்லக் கிழத்தியாய், தாயாய்,  சகல செளபாக்யங்களோடு ஒரு கோயிலில் கொலு வீற்று இருக்கப் போகிற தருணம் ஆரம்பிக்கப் போகிற நேரம்.
ஆயிரம் காலத்து பயிறாய் வளரப்போகிற இந்த உறவை நிர்ணயிக்க  நமது பாரம்பரிய சித்தாந்தங்கள் மூலமாக ரிஷிகளும், அதன் வழி வந்த சாஸ்திரங்களும் சில கட்டுப்பாடான கோட்பாடுகளை ஏற்க்க சொல்கின்றன.  அதன் ஒரு பகுதி,  இந்த பந்தத்தை ஏற்க்கப்போகும் ஒரு ஆணும், பெண்ணும் மனோ ரீதியாகவும், சரீர ரீதியாகவும் பொருத்தப்பட வேண்டும் என்கிற விதி.  உறவுகளுக்குள் ஏற்படும் திருமண பந்தம் மனோ ரீதியாக எடுக்கப்பட்டன.  உறவுகளுக்கப்பால் ஏற்படும் திருமண பந்தம் ஜனன ஜாதகத்தின் மூலமாக பொருத்தப்பட்டன. திருமணத்திற்குப் பின் தம்பதிகள் சீரும் சிறப்புடன்வாழ திருமணப் பொருத்தம் பார்கக வேண்டியது மிக அவசியமாகும். இதை அவர்களின் ஜனன ஜாதகத்தின் மூலமாக அவர்கள் இருவருக்கும்  மனம், குணம், தேக சம்பந்தமான பொருத்தம் உள்ளதா என்வும், அவர்களின் சந்தோஷம், ஆயுள் பாக்யம் , குழந்தை பாக்யங்கள்,  நோயற்ற வாழ்க்கை ஆகியவையும் எப்படி இருக்கின்றன் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.    இதை எல்லோடும் எளிதாக புரிந்து கொள்ளவேண்டும் என்கிற நல்ல நோக்கத்தோடு  வேத சாராம்ஸத்தின்படி என்னால் முடிந்த அளவுக்கு மிக எளிமையான முறையில் ஒரு சிறிய கை ஏடாக தொகுத்து அளித்துள்ளேன்.  திருமண பொருத்தம் பார்க்கும் அனைவருக்கும் இந்த கைஏடு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி
ஜோதிஷ் பாரதி, ப்ரஸ்ன்ன ஜோதிஷ் பாரதி
சிரோண்மனி ஸ்ரீரங்கம் சு. கிருஷ்ணன் ஐய்யங்கார் ,
இயக்குனர்,ஆசிரியர், ஸ்ரீ இராமனுஜர் ஜோதிட பயிற்சி &கல்வி மையம், சென்னை.

விவாஹத்திற்கு ஸ்திரீ புருஷ நக்ஷத்ராதி பொருத்தங்கள்

தினப் பொருத்தம் : (செளக்யமாக இருத்தல்) ஸ்த்ரீ ஜன்ம நக்ஷத்திரம் முதல் புருஷ நக்ஷத்திரம் வரை எண்ணிக் கண்டது 2,4,6,8,11,13,15,17,18,20,24,26 ஆக வந்தால் உத்தமம்.  12வது நக்ஷத்திரத்தின் 1ம் பாதமும், 14ம் நக்ஷத்திரத்தின் 4ம் பாதமும், 16வது நக்ஷத்திரத்தின் 3ம் பாதமும் நீக்கி மற்ற பாதங்கள் மத்யமம்.  இதில் சொல்லாததும், அஷ்டம ராசி நக்ஷத்திரங்களும் பொருந்தாது. 
ஏகதினப் பொருத்தம்:  ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், விசாகம், உத்திரட்டாதி  திருவோணம், ரேவதி இவை 9ம்  ஸ்திரீ புருஷர்களுக்கு ஒரே நக்ஷத்திரமானால் உத்தமம்.  அஸ்வினி, கார்த்திகை, மிருகஷீர்ஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் இவை 10ம் மத்யமம்.  மற்றது பொருந்தாது.  ஸ்தீரி புருஷர்களுக்கு ஒரே ராசியானால் புருஷ நக்ஷத்திரம் முந்தியதும், மேற்படி ஒரே நக்ஷத்திரமானால் நக்ஷத்திர பாதம் முந்தியது சுபம்.  மற்றவை பொருந்தாது.

கணப்பொருத்தம்: (செல்வ வளம், அன்யோன்யம்) அஸ்வினி, மிருகஷீர்ஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி இவை 9ம் தேவகணம் .
பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி இவை 9ம் மனுஷ்யகணம்.
கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் இவை 9ம் ராக்ஷஸ கணம்.
ஸ்திரீ புருஷர்களுக்கு ஓரே கணமானால் உத்தமம்.  தேவ கணமும், மனுஷ்ய கணமும்  மத்யமம், ராக்ஷஸ கணமும் தேவ கணமும் அதமம்.  மனுஷ்ய கணமும் ராக்ஷஸ கணமும் மிருத்ய பயம், பொருந்தாது.  ஸ்திரீ ராக்ஷஸம் கூடாது.  புருஷ ராக்ஷஸம் உத்தமம்.  ஸ்திரீ நக்ஷத்திரத்திற்கு புருஷ நக்ஷத்திரம் 13 க்கு மேற்பட்டால் ஸ்திரீ ராக்ஷஸம் தோஷமில்லை. 

மஹேந்திர பொருத்தம்:  (ஆயுள் விருத்தி, மற்றும் ஸந்தான பாக்யம்) ஸ்திரீ ஜன்ம நக்ஷத்திரம்  முதல்  புருஷ ஜன்ம நக்ஷத்திரம் வரை எண்ணி வருவது 4,7,10,13, 16,19,22,25 ஆனால் பொருந்தும்.  இல்லாவிடில் பொருந்தாது.
இங்கே அன்பர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்.  தினப் பொருத்தத்தில் பொருந்தாத 7ம் நக்ஷத்திரம் வத தாரை என்று சொல்லும் போது எப்படி மஹேந்திரத்தில் பொருந்தும் என்ற சந்தேகம் வரும்.   மஹா கேந்திரம் என்பதே மஹேந்திரம் ஆகும்.  அதாவது ஸ்திரீ ஜன்ம நக்ஷத்திரம் இருக்கும் ராசியில் இருந்து எண்ணும் போது புருஷ ஜன்ம நக்ஷத்திரம் நான்காவது ராசியில் வரும் ஏழாவது நக்ஷத்திரமாக வந்தால் பொருந்தும். இது மஹா கேந்திரப் பொருத்தமாகும்.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்: (தீர்கக சுமங்கலிப் பாக்யம்) ஸ்திரீ ஜன்ம நக்ஷத்திரம் முதல் புருஷ ஜன்ம நக்ஷத்திரம் வரை எண்ணி வருவது 13க்கு மேற்பட்டால் உத்தமம்.  7க்கு மேல் மத்யமம்.  அதற்குள் வந்தால் பொருந்தாது.   
யோனி பொருத்தம்: ( தாம்பத்ய சுகம்) அஸ்வினி, சதயம் : குதிரை,     பரணி,  ரேவதி: யானை, 
                               பூசம், கார்த்திகை: ஆடு,         ரோகிணி, மிருகசீர்ஷம்: பாம்பு,
                               திருவாதிரை, மூலம் : நாய்,      ஆயில்யம், புனர்பூசம்: பூனை,
                               மகம், பூரம்  :  எலி,    உத்திரம், உத்திராடம்,  உத்திரட்டாதி: எருது
                               ஸ்வாதி, ஹஸ்தம்: எருமை கிடா,  சித்திரை, விசாகம்:  புலி
                               கேட்டை,  அனுஷம்: மான்,  பூராடம், திருவோணம் :  குரங்கு. 
                               பூரட்டாதி, அவிட்டம்:  சிங்கம். 
இந்த நக்ஷத்திரங்களில் முன் உள்ளது ஆண் நக்ஷத்திரம், பின்உள்ளது பெண் நக்ஷத்திரம் ஆகும். பசுவுக்கு புலியும்,  குதிரைக்கு எருமையும், குரங்குக்கு ஆடும், ஆடுக்கு புலியும், மான்,பூனைக்கு நாயும், எலிக்கு பாம்பு பூனையும், யானைக்கு சிங்கமும், பாம்புக்கு பூனையும்,  கீரியும்  வைரியாகும். 
மானுக்கு பசுவும், ஆடுக்கு குதிரையும், நாய்க்கு மனுஷனும் நட்பாகும்.  மற்றது சமம். குரங்கு எல்லா யோனிக்கும் நட்பு.   ஸ்திரீ, புருஷர்களுக்கு நக்ஷத்திரங்களுக்குண்டான மித்ர (நட்பு), சம யோனிகளாயிருந்தால் உத்தமம்.  சத்ரு யோனி அதமம்.  சேர்க்கக் கூடாது. புருஷனுக்கு ஸ்திரீ யோனியும், ஸ்திரீக்கு புருஷ் யோனியும். கூடவே கூடாது.

ஜன்ம ராசி பொருத்தம்  (மன ஒற்றுமை)  ஸ்திரீ ஜன்ம ராசி முதல் புருஷ ஜன்ம ராசி வரை எண்ணிக் கண்டது ஸ்திரீ ராசிக்கு புருஷ ராசி 2-12 ஆனால் மிருத்யு, கூடாது.  12-2 ஆக வந்தால் ஆயுள் விருத்தியாகும்.  நல்லது, உத்தமம்.  11-3 ஆக வந்தால் சுகம் கூடும்.  10-4 ஆக வந்தால் செல்வம் சேரும்.  ஷஷ்டாஷ்டகமான 6-8 கூடாது.  7க்கு 7ஆக வந்தால் (சம சப்தமாக) மிகவும் உத்தமம்.  வாழ்க்கையில் அனைத்து சந்தோஷமும் கூடும். 
ராசி அதிபதி பொருத்தம்:  (சம்பந்திகளின் இணக்கம்) சூரியன்: சிம்மத்திற்கும்,  சந்திரன்: கடகத்திற்கும் , செவ்வாய் : மேஷம், விருச்சிகத்திற்கும், புதன்: மிதுனம், கன்னிக்கும்,  குரு : தனுசு , மீனத்திற்கும், 
சுக்ரன்: ரிஷபம், துலாத்திற்கும்  சனி: மகரம், கும்பத்திற்கும் அதிபதிளாவார்கள்.   ராகு, கேதுவுக்கு வீடுகள் கிடையாது.
 ஸ்திரீ ஜன்ம ராசி அதிபதி புருஷன் ஜன்ம ராசி அதிபதிக்கு மித்திரர்களாக இருப்பது உத்தமம்.  சம மித்திரர்களானாலும் உத்தமம்.  

வஸ்யப் பொருத்தம்:  (குடும்ப ஓற்றுமை) மேஷத்திற்கு சிம்மம்,விருச்சிகமும்,  ரிஷபத்திற்கு கடகமும், துலாமும்,  மிதுனத்திற்கு கன்னியும், கடகத்திற்கு விருச்சிகமும், தனுசும், சிம்மத்திற்கு துலாமும் , மீனமும், கன்னிக்கு ரிஷபமும், மீனமும்,  துலாத்திற்கு மகரமும்,  விருச்சிகத்திற்கு கடகமும், கன்னியும், தனுசுக்கு மீனமும், மகரத்திற்கு மேஷமும், கும்பமும்,  கும்பத்திற்கு மீனமும் , மீனத்திற்கு மகரமும் வஸிய ராசிகளாகும்.  ஸ்திரீ ஜன்ம ராசிக்கு  புருஷ ஜன்ம ராசி வஸியமானால் உத்தமம்.   புருஷ ஜன்ம  ராசிக்கு ஸ்திரீ ஜன்ம ராசி வஸியமானால் மத்யமம்.  மற்றவை கூடாது.

ரஜ்ஜு பொருத்தம்:  (திருமாங்கல்ய பலம்) ஸ்திரீ புருஷ நக்ஷத்திரங்கள் ஓரே ரஜ்ஜுவாகில் பொருந்தாது.  பின்ன ரஜ்ஜுவாக இருத்தல் வேண்டும்.  அதிலும் இரண்டும் ஏர்முகமாக(ஆரோகணம்) இருக்க வேண்டும்.  இரண்டும் இறங்கு(அவரோகணம்) முகத்திலிருந்தால் நாசம் கூடாது.  ஒன்று ஆரோகணத்திலும் மற்றொன்று அவரோகணத்திலும் இருந்தால் விவாஹம் செய்யலாம். ஒரே வரிசையில் இருந்தால் சிரோ ரஜ்ஜுவானால் புருஷனுக்கு ஆகாது.  கண்ட ரஜ்ஜுவானால் ஸ்திரீக்கு ஆகாது.  நாபி ரஜ்ஜுவானால் புத்ரஹானி , ஊரு ரஜ்ஜுவானால் தரித்திரம்.  பாத ரஜ்ஜுவானால் தேச ஸஞ்ஞாரம். 
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆரோ சிரோ ரஜ்ஜு,  ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆரோ கண்ட ரஜ்ஜு, திருவாதிரை, ஸ்வாதி, சதயம் அவரோ கண்ட ரஜ்ஜு,  கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆரோ நாபி ரஜ்ஜு,  புனர்பூசம், விசாகம், பூரட்டாதி அவரோ நாபி ரஜஜு,  பரணி, பூரம், பூராடம் ஆரோ ஊரு ரஜ்ஜு,  பூசம், அனுஷம், உத்ரட்டாதி அவரோ ஊரு ரஜ்ஜு, அஸ்வினி மகம், மூலம், ஆரோ பாத ரஜ்ஜு,  ஆயில்யம், கேட்டை, ரேவதி அவரோ பாத ரஜ்ஜு.  இந்த அட்டவணயை பார்த்து ரஜ்ஜு பொருத்தம் செய்யவும்.  ரஜ்ஜு பொருத்தம் எல்லா வர்க்கத்தை சேர்ந்தவர்க்கும் முக்கியமானது. ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் திருமணம் செய்யக்கூடாது.
வேதை பொருத்தம்:  (குடும்ப அமைதி) அஸ்வினிக்கு கேட்டையும், பரணிக்கு அனுஷமும், கார்த்திகைக்கு விசாககமும், ரோஹிணிக்கு ஸ்வாதியும், மூலத்திற்கு ஆயில்யமும், பூராடத்திற்கு பூசமும், உத்திராடத்திற்கு புனர்பூசமும், திருவோணத்திற்கு திருவாதிரையும், மகத்திற்கு ரேவதியும், பூரத்திற்கு உத்திரட்டாதியும், உத்திரத்திற்கு பூரடாதியும், ஹஸ்தத்திற்கு சதயமும், வேதையாகும். மேலும் மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஒன்றொக்கு ஒன்று வேதையாகும். ஸ்திரீ புருஷர்களுக்கு ஜன்ம நக்ஷத்திரங்கள் ஒன்றொருக்கு ஒன்று வேதையாக வரக்கூடாது.

நாடி பொருத்தம்:  (உடல்)  அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், ஹஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய ஒன்பதும் தக்ஷண பார்ச்சுவ நாடி,  பரணி, மிருகசீர்ஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும் மத்திம நாடி, கார்த்திகை,  ரோகிணி, ஆயில்யம், மகம், ஸ்வாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி ஆகிய ஒன்பதும்  வாம பார்ச்சுவ நாடி.  
ஸ்திரீ புருஷர்களுக்கு இருவரின் நக்ஷத்திரங்கள் மத்திய நாடியாக இருந்தால், பெண்ணுக்கும், தக்ஷிண வாம பார்ச்சுவ நாடியாகில் ஆணுக்கும் தோஷம்.  வேறு வேறு நாடியாக இருந்தால் தோஷமில்லை, பொருத்தம் உண்டு.  நாடி பொருத்தம் மிகவும் அவசியம்.
மேலே குறிப்பிட்டுள்ள பொருத்தங்களில் தினப் பொருத்தம் பிராமணர்களுக்கும், கணப் பொருத்தம் க்ஷத்திரியர்களுக்கும்,  ராசி பொருத்தம் வைசியர்களுக்கும், யோனி மற்றவர்களுக்கும்,  ரஜ்ஜு எல்லா ஜாதியினருக்கும் மிகவும் அவசியம்.   சாஸ்திரங்களில் சொல்லியபடி மிருகசீர்ஷம், மகம், ஸ்வாதி, அனுஷம், இந்த நான்கிற்கும் மனப் பொருத்தம் இருந்தாலே போதுமானது.  மேலும், ஆயில்யம், கேட்டை, மூலம், விசாகம் இந்த நான்கு நக்ஷத்திரங்களும் தோஷம் உள்ளவை என பாரம்பரிய ஜோதிஷ சாஸ்திரங்களில் சொல்லப்படவில்லை.  மனிதர்களின் மனோ பயம் தான் இதற்கு காரணம்.   
நக்ஷத்திர பொருத்தம் பார்த்த பிறகு பார்க்க வேண்டிய முக்ய பொருத்தங்கள்.
விவாஹ பொருத்தம் பார்க்கும் போது முதலில் மேலே சொன்ன தசப் பொருத்தம் முக்கியம்.  பிறகு ஜாதக ரீதியாக பொருத்தம் பார்ப்பது முக்கியம்.  நக்ஷத்திர பொருத்தம் முக்யமானதாக இருந்தாலும் ஜாதக பொருத்தமும் அதைவிட முக்கியம்.  
2.  ஏழாவது தாரை ஆண் நக்ஷத்திரமும், இருபத்தி இரண்டாவது பெண் நக்ஷத்திரமும் கூடாது. அதாவது பெண்ணின் நக்ஷத்திரம் முதல் எண்ணும் போது ஆணின் நக்ஷத்திரம் ஏழாவதாக வரக்கூடாது.  அதேபோல் பெண்ணின் இருபத்தி இரண்டாவது நக்ஷத்திரமாகவும் வரக்கூடாது.
3.  ஆண் ஜாதகத்தின் 10 வது அதிபதி (லக்னத்தில் இருந்து எண்ண வேண்டும்) பெண் ஜாதகத்தில் அவரின் லக்னத்தில் இருந்து 6,8,12ம் இடங்களில் மறையக்கூடாது.  நீச்சம் ஆகக்கூடாது. அதுவே ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால் உத்தம பொருத்த்ம்.
4.  பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேக்கை இருந்தால் ஆண் ஜாதகத்தில் சுக்ரனும் கேதுவும் சேரக்கூடாது.  அதே போல் செவ்வாய் ராகு சேர்க்கை பெண் ஜாதகத்தில் இருந்தால் குரு ராகு சேர்க்கை ஆண் ஜாதகத்தில் இருக்கக்கூடாது.   திருமண வாழ்க்கை போர்க்களமாக  இருக்கும்.  சில சமயங்களில் பிரிவு கூட நேரலாம்.
5.  பெண்ணின் ஜாதகத்தின் ஜன்ம ராசியோ, லக்னமோ ஆண் ஜாதகத்தின் ராசிக்கு அல்லது லக்னத்திற்கு ஷஷ்டாஷ்டகமாக அதாவது 6க்கு 8ஆக வரக்கூடாது.
6.  திருமண காலத்தில் ஒருவரின் தசா முடியும் காலம் எதிர் பாலரின் ஜாதகத்தில் அதே தசா காலம் 11 மாதங்களுக்குள் ஆரம்பிக்கூடாது. 
7.   ஒருவரின் ஜாதகத்தில் சுக்ரன் இருக்கும் ராசியில் எதிர் பாலரின் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் நல்ல பொருத்தம். 
8.   அதே போல் ஒருவரின் ஜாதகத்தில் தோஷம் தரும் கிரஹங்கள் அந்த அந்த வீட்டில் இருக்குமேயானால், அது எதிர் பாலரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6, 8, 12 ல் மறைவது அல்லது நீச்சமாவது நல்லது. 
9.  ஒரு வரின் ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி இன்னொருவரின் ஜாதகத்தில் நீச்சம் ஆக கூடாது.  நீச்ச கிரஹ சேர்க்கை கூடாது.  (அதாவது ஒரு சொல் வழக்கு உண்டு.  இரண்டாமாதி நீச்சமானவன் வீட்டில் பெண் எடுக்கவும் கூடாது இரண்டாமாதி நீச்சமானவனுக்கு பெண் கொடுக்கவும் கூடாது)
10.  பெண்ணின் லக்னமும் ஆணின் லக்னமும் ஒன்றொக்கொன்று திரிகோணத்தில் இருந்தால் நல்லது.
11.  அதேபோல் ஒரு பெண்ணின்  லக்னாதிபதி அவளுக்கு சேர்க்கும் ஆணின் ஜாதகத்தின் ஒன்பதாம் அதிபதியாக  இருந்தால் அவளே பாக்யவதி.
12.  ஒருவரின் ஜாதகத்தில் பனிரெண்டாம் பாவத்தில் உஷ்ணகிரஹம் இருந்தால் இன்னொருவரின் ஜாதகதில் தட்ப கிரஹம் இருக்கவேண்டும்.  அதாவது அந்த உஷ்ணத்தை தணிக்க கூடிய சாத்வீக கிரஹம் இருக்க வேண்டும்.
13.   ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் பாவம், (களத்திர பாவ.ம்) , எட்டாம் பாவம்,(மாங்கல்ய ஸ்தானம்),   இரண்டாம் பாவம்,(குடும்ப ஸ்தானம்),  நான்காம் பாவம்(சுகஸ்தானம்)  ஆகியவை பாபர்களின் பிடியில் இல்லாம இருப்பது நல்லது.  இதில் எந்த பாவம் பாபர்களின் பிடியில் இருக்கிறதோ அந்த பாவம் பாதிக்கும்.    நான்காம் பாவமானால் சுகமான வாழ்க்கை இருக்காது. இரண்டாம் பாவமானால் குடும்பம் வாழ்க்கை வறுமையின் பிடியில் சிக்கும்.  ஏழாம் பாவம், எட்டாம் பாவம் திருமண பிரிவை தரும். 
14.  அடுத்து கிரஹ இணைவுகள்  .   ஆணின் ஜாதகத்தில் சூரியன் சுக்ரன் இணைவு கூடாது. பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் சுக்ரன் இணைவு கூடாது.  இவை உடலில் உள்ள அணுக்களின் குறைபாட்டை சொல்லும் .
15.  ஆணின் ஜாதகத்தில் சூரியனும் சுக்ரனும் பலமாய் ஒற்றை ராசிகளின் நின்றால் நல்லது. அதேபோல் பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயும் சந்திரனும் பலமாய் இரட்டை படை ராசிகளில் நின்றால் நல்லது   
16.  அதே போல் இரண்டு பேர் ஜாதகத்தின் மூன்றாம் அதிபதிகள் பகை பெறக் கூடாது.
17.  நபும்சக அலி யோகங்கள் எனப்படும் விதிப்படி ஆணின் ஜாதகத்தின் லக்னாதிபதி பெண்ணின் ஜாதகத்தில் அலி கிரஹ சேர்க்கை பெறக் கூடாது.
18.  ஒருவரின் ஜாதகத்தில் ராகு தனியாக நின்றால் இன்னொருவர் ஜாதகத்தில் தனியாக ராகு நின்றால் அந்த ஜாதகத்தினை சேர்க்ககூடாது.
19.  ஒருவரின் ஜாதகத்தின் ஒன்பதாம் அதிபதி இன்னொருவர் ஜாதகத்தில் பாப ஹர்த்தாரி யோகம் பெறக் கூடாது.  முக்யமாக பெண்ணின் ஜாதகத்தில் இது இருக்க கூடாது.
20.  பெண்ணின் ஜாதகத்தில்   அவளின் ஆறாம் அதிபதி ஆணின் ஜாதகத்தில் உச்சம் பெறக்கூடாது.
21.  பாப சாம்யங்கள் பொருத்தம் எனப்படும் பாபர்கள் சம்பந்தம் இருவர் ஜாதகத்திலும் அதிக வித்யாசம் இருக்க  கூடாது.  பெண்கள் தோஷ சாம்யம் ஆண்களை விட குறைவாக இருக்க வேண்டும். 
22.  இரண்டு பேர் ஜாதகத்திலும் சுப ஸ்தானமான நான்காம் வீட்டில் அதிக உஷ்ண பாபர்கள் இருக்க கூடாது.  இரண்டு குடும்பத்திலும் பெண்கள் ஒற்றுமை குறைவு ஏற்படும்.
23.  ஒருவர் ஜாதகத்தின் ஏழாம் அதிபதி இன்னொருவர் ஜாதகத்தில் விருச்சிகத்தில் அமராமல் இருப்பது.
24.  ஆத்ம காரகனோ, மனோகாரகனோ ஜாதகத்தில் நீச்சமோ, 6,8,12ல் மறையாமல் இருப்பது இருவரின்தாம்பத்ய வாழ்க்கையில் ஆத்ம, மனோ பலத்தை கூட்டி அன்யோன்யத்தை வளர்க்கும்.
25.  ஆண் ஜாதகத்திலோ, பெண் ஜாதகத்திலோ  அவர்களின் மூன்று மற்றும் ஏழாம் அதிபதி பரிவர்த்தனை பெறுவதோ, பாதாகாதிபதி சேர்க்கையோ பெறக்கூடாது.

இவைகளும் பார்த்து ஜாதகத்தினை பொருத்துவது நல்லது.  இன்றைக்கு இருப்பது வேகமான உலகம்.  ஆனாலும் இன்றய கால கட்டத்தில்தான் அதிக விவாஹரத்துக்கள் ஏற்படுகிறது. ஆகவே ஆயிரம் காலத்து பயிரான இந்த திருமண வாழ்க்கையை நன்கு பொறுமையாக பரிசீலித்து ஜாதகங்களை இணைப்பது நல்ல ஆரோக்யமான குடும்ப வளர்ச்சியை தந்து சந்ததிகள் பெருகி சந்தோஷமமும் பெருகும்.

வாழ்க வளமுடன்.   ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.
 
  
   

 


Thursday 16 March 2017

சர்க்கரை நோய்

இனிப்பு:  இந்த வார்த்தையே  வயது வித்யாசம் இல்லாமல் எல்லோருக்கும் நாக்கில் நீர் வரவழைக்கும்.  விளம்பரங்கள் கூட ஸ்வீட் எடு கொண்டாடு என்பதாக இருக்கிறது.  சிறு குழந்தைகளுக்கு சாக்லட்ஸ் கொடுக்கும் போது தனக்கும் ஒன்று எடுதுத்துக் கொள்ளும் தன்மை. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கூட கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல்அந்த இனிப்பை   ஒருவருக்கும் தெரியாமல்  சாப்பிடும் தன்மை.   இப்படி எல்லோர் வாழ்விலும் அன்றாடம் கோலோச்சி கொண்டிருக்கும் சர்க்கரை ஒருவருக்கு உடலில் அதிகமானால் வரும் நோய் சர்க்கரை நோய். இன்சுலின் குறைபாட்டால் வரக்கூடியது  இது ஒருவருக்கு சர்க்கரையால் மட்டுமே வரக் கூடிய நோயா.  அல்லது தற்காலத்தில் இன்சுலின் குறைபாட்டை ஏற்படுத்தி எல்லோருக்கும் வரவழைக்கும் ஒரு உணவு சார்ந்த விஷயமா  அல்லது பரம்பரை பரம்பரை வழியாக வரக்கூடியதா.  உடலில் சர்க்கைரையின் அளவு கூடியிருப்பதை கணிக்கும் ஒரு மருத்துவர் கூட கேட்கும் கேள்வியே உங்கள் குடும்பத்தில் அம்மா அப்பா அல்லது தாத்தாவிற்கு இருக்கிறதா என்று கேட்கிறார்.   இப்படி இருக்கும் இந்த நோய் இருப்பதை ஜாதக ரீதியாக கணிக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையே என்னுடைய இந்த கட்டுரையாகும்.

வெறும் சர்க்கரை மட்டும் அல்லாமல், நேரம் தவறி உணவருந்துதல்,  அதாவது சாப்பிடும் வேளைக்குண்டான இடைவெளி அதிகமாக இருத்தல்,  பட்டை தீட்டப்பட்ட அதாவது பாலீஷ் செய்த பச்சரிசி அதிகமாக உண்பது ,  ஸ்வீட் பொட்டெடோ எனப்படும் அதிக வெள்ளை உருளைக்கிழக்கை உணவில் சேர்த்துக் கொள்வது,  அதிக வெள்ளை சர்க்கரை சேர்த்த இனிப்புகள் சாப்பிடுவது .  இவையெல்லாம் உடலில் இன்சுலின் சுரப்பியை பாதித்து அதில் குறைபாட்டை ஏற்படுத்தி சர்க்கரை நோயை கொடுக்கும்.  இதில் அதிக இடைவெளி கொடுத்து உண்பது அதாவது நேரம் தவறி உண்பது  உடலில் வாயுவை ஏற்படுத்தும். இது ஜாதகத்தில் குருவின் காரகத்துவம்.  அதேபோல் சாதரண வெல்லம், நாட்டு சர்க்கரை, வெல்லப்பாகு இவைக்கும் குரு காரணமாக இருந்தாலும் அதை நவீனமயமாக்கி வெள்ளை சர்க்கரை ஆக்கும் போது அது ஜாதகத்தில் சுக்ரனின் காரகமாக மாறும்.  இதில் இதை நீடித்து பரம்பரை வழியாக கொண்டுவருவது சனியின் வேலையாகும்.  இந்த நோயை அதிகப்படுத்துவது ராகுவின் வேலையாகும்.  இந்த நோயை கடுமையாக்கி அதாவது ஒரு இடத்தில் தங்கவைத்து சுரப்பிகளின் செயல்பாட்டை குறைத்து உடலில் கிட்னியின் செயல் பாட்டை வலுவிழக்க செய்வது கேதுவின் வேலையாகும். 


நமது உடலில்,  ஜெனடிக் கோட் எனப்படும் விகிதாசாரம் ஒரு ஜாதகனின் தந்தையின் அளவு 24%,  தாத்தாவினுடையது 32%, அவருடைய தந்தையினுடையது 16%  அதற்கு முன் 8%,6%,4%,2% ஆக மொத்தம் ஏழு தலை முறை ஜெனடிக் சார்ந்த அணுக்கள் சார்ந்த விஷயங்களும்  ஜாதகனுடையது 8% ஆக மொத்தம் 100 சதவீகமாக இருக்கும்.  இதில் எந்த தலை முறையில் என்ன வியாதி இருந்ததோ, அது அந்த விகிதாசாரத்தில் ஜாதகனின் உடலில் இருக்கும்.  அதை அதிகப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது ஜாதகனின் கடமையாகும்.

 ஜாதகத்தில் நோயை குறிக்கும் பாவம் ஆறாம் பாவம்,  அதை தீவிரப்படுத்தி தீர்க்க முடியாமல் சிறு நீரக பாதிப்பை ஏற்படுத்துவது எட்டாம் பாவமாகும். அதற்கு தீவர சிகிச்சை எடுத்து கொள்வதையும் அல்லது மருத்துவமனையில் தங்கி டயாலிசிஸ் செய்து கொள்வதையும், அந்த நோயால் கண்கள் பாதிக்கப்படுவதையும் பனிரெண்டாம் பாவமும் சொல்லும்.  இந்த ஆறாம் பாவமும்  பனிரெண்டாம் பாவமும் மிக முக்யமாக ஒருவரின் நோயின் தன்மையை துல்லியமாக குறி காட்டும்.  ஒரு ஜாதகத்தில் அயன சயன சுகஸ்தானமான பனிரெண்டாம் பாவம் ஒருவரின் தூக்கத்தை சொல்லும். ஒருவருக்கு இந்த பாவம் கெட்டு தூக்கம் சரிவர இல்லையென்றால் உடலில் முதலில்   பாதிப்பது  கல்லீரல் மற்றும் கணையமும் பாதிக்கும் . இவை கண்களை சோர்வாக்கி பார்வையில் குறைபாட்டை ஏற்படுத்தி விடும். 
இதை ஒரு மருத்துவர் இப்படி விளக்குகிறார்.:
Your body converts the food you eat into glucose that your cells use for energy. But your cells need insulin to bring the glucose in. (Reproductive system by Venus)
If your body doesn't make enough or anyinsulin, or if your cells resist the insulin your body makes, the glucose can't get into them and you have no energy. This can make you more hungry and tired than usual.
The average person usually has to pee between four and seven times in 24 hours, but people with diabetes may go a lot more.
Why? Normally your body reabsorbs glucose as it passes through your kidneys. But when diabetes pushes your blood sugar up, your body may not be able to bring it all back in. It will try to get rid of the extra by making more urine, and that takes fluids.
You'll have to go more often. You might pee out more, too. Because you're peeing so much, you can get very thirsty. When you drink more, you'll also pee more.
Because your body is using fluids to make pee, there's less moisture for other things. You could get dehydrated, and your mouth may feel dry. Dry skin can make you itchy.
Changing fluid levels in your body could make the lenses in your eyes swell up. They change shape and lose their ability to focus.
These tend to show up after your glucose has been high for a long time.

 கிரஹங்களில் சுக்ரன் சர்க்கரை நோயை முதலில் உடலில் ஆரம்பித்து வைக்கும். அதன் பிறகு குரு அதை தீவிரப்படுத்தும்.  பிறகு அதை நிரந்தரமாக்கி விடுவது சனியின் வேலையாகும்.   ஆகவே இந்த கிரஹங்கள் ஜாதகத்தில் 6,8,12 ம் பாவங்களோடு தொடர்ப்பு கொண்டாலோ, இந்த பாவங்களில் சேர்க்கை பெற்றாலோ ஒருவருக்கு சர்க்கரை வியாதி கண்டிப்பாக வரும்.  மேலும்  இந்த பாவங்கள் நீர் ராசியாக வந்தால் அதாவது கடகம், விருச்சிகம், மீனம் ஆக வந்து குரு, சுக்ரன், சனி தொடர்பு கொண்டால் நோயின் தாக்கம் அதிகமாகி அவர்கள் சிறுநீரை கட்டுப்படுத்தமுடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.  இதோடு ராகு தொடர்பு கொண்டால் அதுவும் பனிரெண்டாம் பாவத்தோடு சேர்ந்தால் உடலில் அவயத்தை வெட்ட வேண்டிய நிலைக்கு செல்ல வேண்டி இருக்கும். அதேபோல் கேது தொடர்பு கொண்டால் அதுவும் எட்டாம் பாவத்த்தில் சேர்க்கை பெற்றால்  சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு  செயல் இழந்து அதை மாற்றக்கூடிய நிலைக்கு கூட செல்ல நேரிடும். ஆகவே ஒருவரின் ஜாதகத்தில் சர்க்கரை நோயை கொடுக்க கூடிய கிரஹங்களாக குரு, சுக்ரன் ஆகியவைஆகும். அதை பாரம்பர்யத்தில் சம்பந்தப்படுதுவது சனி ஆகும். அதை தீவிரமாக மாற்றி அவயத்தை வெட்டுவது  ராகுவும் , உறுப்புகளை செயலிழக்கச் செய்வது கேதுவாகும்.  ஓவ்வொரு ராசியிலும் மிருத்யு பாகை அதாவது கண்டத்தை ஏற்படுத்தும் பாகை என்று ஒன்று இருக்கும். அந்த மிருத்யு பாகையில் உள்ள கிரஹங்கள் உடலில் உள்ள நோயை குறிகாட்டும்.  அந்த பாகையில் 6,8,12ம் பாவாதிபதிகள் , ராகு, கேது ஆகியவை நின்றால் நோயை சற்று அதிகமாகவே தரும்.



இதை சமீபத்தில் மறைந்த நமது முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஜாதகத்தை பார்த்தால் தெரியும்.  அவர் ஜாதகத்தில் நீர் ராசியான குருவின் வீடான மீனத்தில் சுக்ரன் நின்று, கடகத்தில் சனி நின்று ராகு மேஷத்தில் சுக்ரன் நக்ஷத்திரல் நின்று சர்க்கரை வியாதியை அதிகப்படுத்தியது.

இதற்கு பரிகாரமாக முதலில் நல்ல தூக்கம் வேண்டும்.  நேரம் தவறாமல் உணவு எடுத்துக் கொள்வது நல்லது.அதிலும் மேலே சொன்ன உணவு வகைகளில் கட்டுப்பாடு அவசியம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள்  பச்சரிசி உணவை விட புழுங்கள் அரிசி உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதிக நெய் சேர்த்த இனிப்புகள் சாப்பிட கூடாது. ஐஸ்கீரீம், வாழைபழம், மாம்பழம், உலர்ந்த பழங்கள், திராட்சை, கல்கண்டு ஆகியவை சாப்பிடகூடாது.  பீடி, சிகரட், மது இவை கூடாது.    சிறிய பாகற்காய் சூப் வைத்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். நார் சத்து உள்ள பொருட்கள் எடுத்துக் கொள்ளலாம். வெள்ளரி, கொய்யா, சாத்துக்குடி, ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்.அரிசி உணவிற்கு பதிலாக கோதுமை, கேழ்வரகு கலந்த உணவு எடுத்துக் கொள்ளலாம்.  இந்த நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி பசி ஏற்படும். ஆகவே சிறிய அளவு உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.       சர்க்கரை கொல்லி என்ற  பொடி ஆயுர்வேதத்தில் உள்ளது அதை வாங்கி மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.  முதன் முதலில் மருந்து எடுத்துக் கொள்பவர்கள் ஞாயிற்றுக் கிழமை அன்று வரும் குரு ஓரையில் எடுத்துக் கொண்டால் நோய் சீக்கிரம் குணமாகும்.  சித்த மருத்துவம் நன்கு பயனளிக்க கூடியது.  இதில் பஞ்ச கர்ம முறையில் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டால் சந்ததிகளுக்கு இதன் தாக்கம் இருக்காது.   மேலும் தகுந்த மருத்துவர் ஆலோசனையின் பேரிலேயே மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
நோயற்றே வாழ்வே குறைவற்ற செல்வம்.   வாழ்க வளமுடன்


அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்………………………..ph: 9094176198 
பனிரெண்டாம் பாவம் சம்பந்தப்பட்ட முக்யமான விதிகள்

1. லக்னாதிபதி பனிரெண்டில் இருந்தால் கெளவரத்திற்கு பங்கம் ஏற்படும்.

2. பத்தாமாதி பனிரெண்டில் இருந்தால் ஸ்திரமான தொழில் இருக்காது. வியாபாரம் நல்லது. உத்யோகத்தில் தொல்லைகள் இருக்கும்.  கூட்டாளிகளே எதிரிகள் ஆவார்கள்.

3. பனிரெண்டாமாதி அங்கேயே இருந்தால் கடைசிகால அமைதியான வாழிக்கை. முக்கியமாக இங்கு சாத்வீகமான கிரஹங்கள் இருந்தால் நல்லது.  உஷ்ண கிரஹங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். உஷ்ண கிரஹங்கள் இருந்தால் அமைதியான தூக்கம் இருக்காது.

4. ஏழாமாதி பனிரெண்டில் இருந்தால் அதிக செலவாளி, கூட்டு வியாபரத்தில் நஷ்டம். நோயாளியான மனைவி, பிரிவு, அதிக பணத்தாசை,  நண்பர்களால் அதிக நஷடத்தை ஏற்பார்கள். சிலர் வெளி நாட்டில் அதிக பிரச்சனையை சந்திப்பார்கள்.

5. எட்டாமாதி பனிரெண்டில் இருந்தால் தீர்க்காயுள், கடன் வசூலாகும், உயில், சொத்து, இன்சூரன்ஸ் மூலம் திடீர் தன வரவு. பலவிதமான நோய்கள், விஷ ஜந்துக்களால் தொல்லை முதலியவை ஏற்படும். இந்த பாவாதிபதியின் தசையில் ஒரு ஜாதகர் தன் கடனை அடைப்பதற்கு முயற்ச்சி எடுத்தால் அது சாத்யமாகும்.

6.  ஒன்பதாமதிபதி, பதினோராமதிபதி, பனிரெண்டில் இருந்தால் சரியான வருமானம் இருக்காது. தகப்பனாரின் சகோதரர்களால் நஷ்டங்கள் ஏற்படலாம். 

7.  இரண்டாமதி பனிரெண்டாமாதி பரிவர்த்தனை தரித்தர யோகம், வீண் செலவுகள். கண் நோய்கள் ஏற்படலாம்.

8.  மூன்றாமாதி பனிரெண்டாமாதி பரிவர்த்தனை வாக்கில் நாணயம் இருக்காது. பயணத்தால் வீண் செலவு,  இளைய சகோதரனால் வீண் விரயம், குழந்தைகளால் நிம்மதி இல்லாமை, பெண்ணால் வாழ்க்கையில் உயர்வு, ஆனால் கஷ்டங்களும் ஏற்படும்.

 9.  மூன்றாமாதி  பத்தாமாதி பனிரெண்டில் இருந்தால் எதையும் தப்பாக நினைக்கும் எண்ணம்,  உடன் பிறப்புகளால் வம்பு வழக்கு, கோர்ட் பிரச்சனை, எற்படும். முக்யமாக தம்பியின் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தில் பிரச்சனை ஏற்படலாம்.   வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

10.  ஐந்தாமாதி, பனிரெண்டாமாதி பரிவர்த்தனை குடும்ப தகராறு, குழந்தைகளால் பிரச்சனை அவர்களால் வழக்கு பிரச்சனை ஏற்படும். போட்டி, பந்தயங்களில் தோல்வி ஏற்படும்.  சிலருக்கு பிரசவத்தில் பிரச்சனை ஏற்படும்.

11. ஒன்பதாமாதி பனிரெண்டாமாதி பரிவர்த்தனை வாழ்க்கையில் அதிக எற்ற தாழ்வுகள், சரிவுகள், கஷடங்கள் இருக்கும். இங்கே சுக்ரன் அமர்ந்த சில ஜாதகரின் தந்தைக்கு இரண்டு குடும்ப்பங்கள் இருக்கலாம். அல்லது இரண்டு மனைவிகள் அமைந்திருக்க வாய்ப்புண்டு.

12.  நான்காமாதி, பனிரெண்டாமாதி தொடர்பு பரிவர்த்தனை, வண்டி வாகனங்களால் தொல்லை, வீட்டை பராமரிப்பதில் அதிக செலவு,  தாயுடன் சண்டை, ஏற்படும். சிலருக்கு மனைவி வழி உறவுகளால் ஆதாயம் அடையவும் வாய்ப்புண்டு.

13. ஆறாமாதி பனிரெண்டாமாதி தொடர்பு, அதிக நோய், பிற பெண்களின் மீது ஆசை எறபடும்.

இது விரய பாவமாக இருந்தாலும்,   இங்கு இருக்கும் கிரஹங்களால் ஒரு ஜாதகரின் இறப்பிற்கு பின் அவரின் புகழை பார்க்கலாம்.  இங்கு பலம் பெறாத உஷ்ண கிரஹங்கள் இருந்தால் அதாவது சூரியன், செவ்வாய்,புதன், ராகு, ராகுவுடன் சேர்ந்த கிரஹங்கள் இருந்தால் (குருவை தவிர) அவரின் இறப்பிற்கு பின் அவரை பற்றி அவ்வளவு நல்ல பெயர் இருப்பது கடினம்.  ஆனால், சந்திரன்,  குரு, சுக்ரன் போன்ற கிரஹங்கள் இருந்தால் அவரின் புகழ் நிலைக்கும்.   குரு சனி, குரு ராகு இவர்கள் சேர்ந்து இருந்தால் அதுவும் அது நீர் ராசியாக இருந்தால் அவரின் பூத உடலுக்கு பின் ஆயிரம் பேர் வருவார்கள்.   குரு கேது, கேது, சனி கேது  சேர்க்கை இருப்பின் அவர் இந்த ஜன்மத்தின் கர்ம வினைகளை தீர்த்தவராக இருப்பார்.  அதாவது அவரின் கர்ம வினை தொடர்ச்சி இருக்காது.  அதாவது மறு பிறப்பை அவர் எடுக்க வேண்டிய நிலை வராது. 

      
பதினோராம் பாவம் சம்பந்தப்பட்ட முக்யமான விதிகள்

 1. பதினோராமதிபன் அந்த பாவத்திலேயே இருப்பது நல்ல அறிவும், நல்ல பேச்சு திறமையும் இருக்கும்.  இவரோடு குருவும் புதனும் பலமாக இங்கு நின்றால் Phd. போன்ற உயர் படிப்புகள் சித்தியாகும்.  பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும்  பேரும் புகழும் உண்டாகும். ஆனால் குரு, புதன் லக்ன பாதகாதிபதியாகவோ, மாரகாதிபதியாகவோ  வந்து இங்கு பலம் பெற்றால் தசா புத்திகளில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.  மாரகத்துக்கு ஒப்பான கணடங்களும் ஏற்படும்.  
 
 2. லக்னாதிபதி பதினோராமாதி தொடர்பு வேதாந்தியாகவும், அதில் நிம்மதியும்  அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணமும் இருக்கும்.  கும்ப லக்னக்காரர்களுக்கு இந்த அமைப்பு சரியாக இருக்கும்.   இந்த அமைப்பில் சனியானவர் விரயாதிபதியாகவும் வருவதால் அவரின் மூல திரிகோண ஆதிபத்யம் பலம் பெற்று இந்த அமைப்பை கொண்டு வரும்.  சிலர் குடும்பத்தை விட்டு தனியான வாழ்க்கை வாழ ஆசை படுவார்கள்.  மூத்த சகோதரர்களால் சிலர் ஆதாயம் பெறுவார்கள்.

 3. இரண்டாமாதி பதினோராமாதி தொடர்பு நல்ல தனபிராப்தியும், நல்ல வருமானமும் இருக்கும். பரிவர்த்தனை சிறப்பு.  நல்ல செல்வ செழிப்பை கொடுக்கும்.  மீன லக்னத்திற்க்கு இந்த பலனை எதிர்பார்க்க முடியாது. 

4. ஏழாமாதியும், பதினோராமாதியும் தொடர்பு கொண்டால் நிறைய வெகுமதிகள் கிடைக்கும். பரிவர்த்தனை ஆனால் கூட்டு தொழிலில் பெரும் லாபம் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.   சிலருக்கு திருமணத்திற்கு நல்ல முன்னேர்றம் இருக்கும்.

 5. ஆறாமாதியும் பதினோராமாதியும் தொடர்பு , நண்பர் பகை, எதிலும் தடை, பொருளாதாரத்தில் சரிவு, நோயும் இருக்கும். இந்த அமைப்பில் ஆறாமாதி இங்கு உச்சம் பெறக் கூடாது.  வசதிக்காக அதிக கடன் எற்பட்டு அதிக கஷ்டத்தை கொடுக்கும்.  வரும் வருமானம் வியாதிக்காக விரயமாகும்.

 6. ஒன்பதாம் அதிபதியும் பதினோராமாதியும் பரிவர்த்தனை ஆனால் அரசங்கத்தால் லாபமும், பொருளாதாரத்தில் வெற்றியும், சந்தோஷமான குடும்பமும் அமையும். சிலர் அரசில் உயர் பதவியில் அமரும் பாக்யம் கிடைக்கும். அரசாங்கத்தில் கெளவரமும் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.

7. பத்தாமாதியும் பதினோராமாதியும் தொடர்பு கொண்டால் நல்ல நண்பர்கள், அதிக சம்பாத்தியம், அரசியிலில் வெற்றி, பணக்காரர்களின் தொடர்பு ஏற்படும். செய் தொழிலில் நல்ல வெற்றி உண்டாகும். மேஷ லக்னத்திற்க்கு இந்த பலன் பொருந்தாது.

 8. ஒன்பதமாதி, பத்தாமாதி பதினோராமாதியும் தொடர்பு கொண்டால் தொழிலில் நல்ல லாபமும், வேலையில் முன்னேற்றமும், நல்லவர்களின் நட்பும், பெரிய பணக்காரர்களின் நட்பும் கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதையும், மதிப்பும் கிடைக்கும். 

 9. ஐந்தாமாதி, பத்தாமாதி , பதினோராமாதியும் தொடர்பு கொண்டால் நல்ல உயர்ந்த படிப்பும், நல்ல குழந்தைகளும் உண்டாகும், உயர்ந்தவர்களின் நட்பும் கிடைக்கும். குழந்தைகளால் குடும்பம் வளர்ச்சி அடையும்.  குழந்தைகளில் ஒருவர் வெளிநாட்டில் இருப்பதற்கு வாய்ப்புண்டு.

10.  பனிரெண்டாமாதியும் பதினோராமாதியும் தொடர்பு கொண்டால் தன் லாபத்தை தானே விரயம் செய்வான்.  சிற்றின்பத்தில் அதிக நாட்டம் இருக்கும்.  உல்லாச பயணங்களுக்காக அதிகம் செலவு செய்வார்கள். 


…………………..அன்புடன் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.